தல வரலாறு

குடந்தையில் காவிரி, அரசலாறு ஆகிய இரண்டு ஆறுகள் இடையில் சங்கர மடத்துக்கு அருகில் மன்னர் சரபோஜியினால் கட்டப்பட்டதாக தெரிகிறது. அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் ஸ்வாமி லிங்கத் திருமேனியாய் அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்திருவுரு பிர்மா, விஷ்ணு, சிவ ஐக்கிய வடிவமாக திகழ்வதால் இச்சிவனை வணங்கும் போது அம்மூவரையும் வணங்கிய பேறு கிட்டும். ராகு,கேது தோஷத்திற்கு பரிகாரம் செய்ய திருகாளத்திக்கு செல்ல இயலாதோர் இங்கு அப்பரிகாரத்தைச் செய்து அளவற்ற நற்பயனைப் பெறலாம்.