அருள்மிகு சோமேஸ்வரர் சுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Someswarar Temple, Kumbakonam, Kumbakonam - 612001, Thanjavur District [TM018121]
×
Temple History
தல வரலாறு
பிரளயகாலத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தைச் சிவபெருமான் கிராதவேடம் கொண்டு (வேடன் உருவம்) பாணம் எண்ண அதில் இருந்த சிக்கம் (உறி) இங்கு விழுந்தது, விழுந்த சிக்கம் ஒரு சிவலிங்கமாயிற்று ஆதலின் இத்தலத்திற்குச் சிக்கேசம் எனவும் சுவாமி சிக்கேசர் எனவும் அழைக்கப்பட்டார்.
காரோணம் என்ற பெயருடைய கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளன, 1.குடந்தைக்காரோணம் 2.நாகைக் காரோணம் 3.கச்சிக் காரோணம். காயஆரோகணம் என்பதன் திரிபே காரோணம். காயம் திருமேனி (உடல்) ஆரோகணம் (ஏற்றுக்கொள்ளல்) நவகன்னிகைகள் மகாமக தீர்த்தத்தில் நீராட வரும் பொழுது எழுந்த ஆரவாரத்தால் அம்பிகை அஞ்சி சிவபெருமானை அனைத்துக் கொண்டாள். அம்மையின் காயத்தை இறைவன் ஆரோகணித்துக் கொண்டமையால் காயாரோகணம் ஆயிற்று. சுவாமிக்குக் காயாரோகணர் என்ற பெயரும் உண்டாயிற்று,
சந்திரன் (சோமன்) குருவின் மனைவியைப்பார்த்து மோகம்...பிரளயகாலத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தைச் சிவபெருமான் கிராதவேடம் கொண்டு (வேடன் உருவம்) பாணம் எண்ண அதில் இருந்த சிக்கம் (உறி) இங்கு விழுந்தது, விழுந்த சிக்கம் ஒரு சிவலிங்கமாயிற்று ஆதலின் இத்தலத்திற்குச் சிக்கேசம் எனவும் சுவாமி சிக்கேசர் எனவும் அழைக்கப்பட்டார்.
காரோணம் என்ற பெயருடைய கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளன, 1.குடந்தைக்காரோணம் 2.நாகைக் காரோணம் 3.கச்சிக் காரோணம். காயஆரோகணம் என்பதன் திரிபே காரோணம். காயம் திருமேனி (உடல்) ஆரோகணம் (ஏற்றுக்கொள்ளல்) நவகன்னிகைகள் மகாமக தீர்த்தத்தில் நீராட வரும் பொழுது எழுந்த ஆரவாரத்தால் அம்பிகை அஞ்சி சிவபெருமானை அனைத்துக் கொண்டாள். அம்மையின் காயத்தை இறைவன் ஆரோகணித்துக் கொண்டமையால் காயாரோகணம் ஆயிற்று. சுவாமிக்குக் காயாரோகணர் என்ற பெயரும் உண்டாயிற்று,
சந்திரன் (சோமன்) குருவின் மனைவியைப்பார்த்து மோகம் கொண்டதால் குருவின் சாபத்தால் ஏற்பட்ட காசநோய் நீங்க கோயிலுக்கு தெற்கே தன் பெயரால் தீர்த்தம் சோமதீர்த்தம் (சந்திர தீர்த்தம்) என்ற தீர்த்தம் உண்டாக்கி நீராடி பெருமானை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றான். அன்று முதல் சுவாமி சோமேஸ்வரர் என்ற திருநாமத்துடனும், அம்பிகை சோமசுந்தரி என்ற திருநாமத்துடன் திகழ்கின்றனர், சந்திரன் உண்டாக்கிய சந்திர புஷ்கரணி
மாளவ தேசத்தில் தோன்றிய பிரகஸ்பதி என்பவர் இத்தலத்தின் சோம தீர்த்தத்தில் நீராடி வழிபட்டுத் தேவர்களுக்குக் குருவாகவும் தகுதியைப்பெற்று நவகோள்களில் வியாழன் என்ற பெயர் பெற்றான், வியாழன் பூஜித்ததால் சுவாமிக்கு வியாழ சோமேஸ்வர் என்ற திருநாமம் உரியதாயிற்று. இதனையே மக்கள் ஏழை சோமேஸ்வரர் என்று கூறுகின்றனர்.
திருமால் இத்தலத்தில் ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் ஆற்றல் பெற்றார். அவர் பூஜித்த சிவலிங்கமே. மாலீஸ்வரர் அம்பாள் மங்களாம்பிகை என்ற திருநாமங்களுடன் எழுந்தருளியுள்ளனர். பராந்தகன் என்ற சோழமன்னன் இத்தலத்தில் சோழீசர் என்ற சிவலிங்கத்தையும் திரிபுரசுந்தரி என்ற அம்பிகையையும் பூஜித்து மகப்பேறு பெற்றான் என்பது வரலாறு,
திருஞானசம்பந்தரால் பாடல்பெற்றது, அருணகிரிநாதர் திருப்புகழும் உள்ளது. சேக்கிழார் அருளிய பெரிய புராணப்பாடலும் மற்றும் உமாபதி சிவாச்சாரியார் அருளிய க்ஷேத்திரக்கலிவெண்பா பாடலும் உள்ளன.