அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612002, தஞ்சாவூர் .
Arulmigu Kailasanathar Temple, Kumbakonam, Kumbakonam - 612002, Thanjavur District [TM018122]
×
Temple History
தல வரலாறு
வடநாட்டில் கேதாரம் என்னும் திருத்தலத்தில் பிப்பிலாதன் என்னும் மகா சிவயோகி ஒருவர் நீண்ட காலம் சிவபெருமானை நோக்கி மிக கடுமையான தவம் இயற்ற சிவபெருமானும் பண்நாட்கள் காலம் தாழ்த்தி சிவயோகியின் உறுதி குன்றாத மாபெரும் தவத்திற்கு மகிழ்ந்து அவர்முன் தோன்றி அவருக்கு விருப்பமானதை வழங்க தாம் திருவுள்ளம் கொண்டுஉள்ளதாகவும், செயற்கரிய இத்தவத்தினால் மேன்மை மிக்க பயன் அடையுமாறு விரும்பிய ஓன்றை கேட்க்குமாறு கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சிவயோகியும் தாம் தவம் இயற்றிய நோக்கம் நிறைவேறியதை குறித்து நிறை நெஞ்சம் கொண்டு பெருமானே தாங்கள் திருக்கைலாய மலையில் எவ்வாறு கேட்டவற்றை எல்லாம் வரிவழங்கும் அன்னை உமாதேவியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றிர்களோ அவ்வாறே எளியேனுக்கு திருக்காட்சி அளிக்க வேண்டுகிறேன் என்று பணிந்து...வடநாட்டில் கேதாரம் என்னும் திருத்தலத்தில் பிப்பிலாதன் என்னும் மகா சிவயோகி ஒருவர் நீண்ட காலம் சிவபெருமானை நோக்கி மிக கடுமையான தவம் இயற்ற சிவபெருமானும் பண்நாட்கள் காலம் தாழ்த்தி சிவயோகியின் உறுதி குன்றாத மாபெரும் தவத்திற்கு மகிழ்ந்து அவர்முன் தோன்றி அவருக்கு விருப்பமானதை வழங்க தாம் திருவுள்ளம் கொண்டுஉள்ளதாகவும், செயற்கரிய இத்தவத்தினால் மேன்மை மிக்க பயன் அடையுமாறு விரும்பிய ஓன்றை கேட்க்குமாறு கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சிவயோகியும் தாம் தவம் இயற்றிய நோக்கம் நிறைவேறியதை குறித்து நிறை நெஞ்சம் கொண்டு பெருமானே தாங்கள் திருக்கைலாய மலையில் எவ்வாறு கேட்டவற்றை எல்லாம் வரிவழங்கும் அன்னை உமாதேவியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றிர்களோ அவ்வாறே எளியேனுக்கு திருக்காட்சி அளிக்க வேண்டுகிறேன் என்று பணிந்து வேண்டிக் கொண்டார்.
சிவபெருமான் பிப்பிலாதனை நோக்கி நீவிர் விரும்புவது அதுவானால் கும்பகோணம் என்னும் மிக உயர்வான திருத்தலம் நோக்கி செல்வாயாக நாம் அங்கு வந்து நீ வேண்டிய வண்ணமே திருக்கைலாய காட்சியை வழங்குவோமென திருவாய் மலர்ந்தருளினார் . பிப்பிலாதன் பரம்பொருளை பார்த்து அடியவர்க்கு அருளை அள்ளித்தரும் வள்ளலே, எனக்கோ வயதாகிவிட்டது. கும்பகோணம் என்னும் அப்புண்ணிய தலம் எத்தனை தொலைவில் உள்ளதோ ?- அறியேன். யான் எங்ஙனம் அங்கு செல்வேன்? என வருந்தினார். அடியவருக்கு எளியவராகிய சிற்றம்பலவர் சிவயோகியாரைப் பார்த்து அப்படியானால் அதோ தெரியும் பொய்கையில் நீராடி வருக என பணித்தார்.
அடியவர், ஆண்டவன் கட்டளை இட்ட வண்ணமே குளத்தில் மூழ்கி எழுந்தார். அங்கு இறைவனை காணாமல் திகைத்தார். அந்த இடம் புதியதோர் இடமாகவும்ஏதோ ஒரு அங்கிருந்தோரை விசாரிக்க அங்கிருந்த அடியார்கள் இது கும்பகோணம் என்னும் திருத்தலமாகும் என விளக்கினார் . யோகியார் மகிழ்ந்தார் மீண்டும் பரமனை வழிபாடு செய்தார் .
அண்ணாமலையார் அன்பர் முன்பு அன்னை அம்பிகையுடன் வந்து நின்றபின் அந்த இடத்தை கைலாயமாகவே ஆக்கி அங்கொரு மேடையின் தேசுதிகழ் பூங்கயிலை வெற்பில் புனை மலர்ப்பூங்கோதை இடப்பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதியாக வீற்றிருந்து அருளினார் .
கண்கொள்ளா காட்சியாக இறைவன் இறைவியுடன் அருளை வாரி வழங்கும் திருக்காட்சியை கண்டு களித்த பேரின்ப வெள்ளத்துடன் திளைத்து மாறில்லா மகிழ்ச்சில் மலர்ந்த பிப்பிலாதன் இறையருளை பரிபூரணமாக பெற்று பரம்பொருளுடன் இரண்டற கலந்தனர் .
பின்னர் கைலாய நாதர் சிவலிங்க வடிவம் கொண்டு அவ்விடத்திலேயே திருக்கோயிலையும் கொண்டு இன்றளவும் சிவனடியார்களுக்கு திருக்காட்சி நல்கி அருள்மிகு கற்பகாம்பாளுடன் எழுந்தருளி வேண்டியதை வேண்டியாங்கு அள்ளித்தந்து திருக்குடந்தை திருத்தலத்தின் புகழுக்கு புகழ் சேர்த்து அருள்மிகு கைலாசநாதர் என்னும் பெயரிலேயே அருள்பாலித்து வருகின்றனர்.