ஆதிவராக பெருமாள் திருக்கோயில், கும்பகோணம் - 612001, தஞ்சாவூர் .
Adhivaragaperumal Temple, Kumbakonam - 612001, Thanjavur District [TM018149]
×
Temple History
தல வரலாறு
தலபெருமை
கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்க காரணமான பிரளய காலம் உண்டாவதற்கு முன்பாகவே இவர் இக்காலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை ஆதிவராகர் என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுத்தருளிகின்றனர்.
பிரசாத விசேஉஷம் மூலஸ்தாலனத்தில் சுவாமி பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். நிலம் வீடு தொடர்பான விரச்சனை உள்ளவர்கள் சுவாமியிடம் வேண்டிக் கொண்டல், தீருவதாக நம்பிக்கை. தினமும் இவருக்க அர்த்தஜாம பூஜையின்போது கோரைக்கிழங்கு மாவு உருண்டையாக நைத்தியமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குறிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக்...தலபெருமை
கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்க காரணமான பிரளய காலம் உண்டாவதற்கு முன்பாகவே இவர் இக்காலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை ஆதிவராகர் என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுத்தருளிகின்றனர்.
பிரசாத விசேஉஷம் மூலஸ்தாலனத்தில் சுவாமி பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். நிலம் வீடு தொடர்பான விரச்சனை உள்ளவர்கள் சுவாமியிடம் வேண்டிக் கொண்டல், தீருவதாக நம்பிக்கை. தினமும் இவருக்க அர்த்தஜாம பூஜையின்போது கோரைக்கிழங்கு மாவு உருண்டையாக நைத்தியமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குறிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக் கிழங்கு பொடித்து அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாக பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால் பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்தியம் இவருக்கு படைக்கப்படுகிறது. சுவாமி அமர்ந்த கோலத்தில் இருக்க , அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர். தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக வராக சாளக்கிராமம் உள்ளது. இதில் சங்கு சக்கரத்தில் ரேகைகள் உள்ளன. தினமும் இதற்கு பாலாபிஉஷகம் நடக்கிறது.
ஒரு சமயம் இரண்டாட்சன் என்னும் அசுரன் பூமியை பாதாள உலகத்திற்குள் எடுத்துச் சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி பூமாதேதி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தின் வராக மூர்த்தியாக அருள்புரிகிறார்..
அதிசயத்தின் அடிப்படையில் இத்தல பெருமாள் சாளக்கிராம மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்