Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Ekambaranathar Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001816]
×
Temple History

தல வரலாறு

ஏகாம்பரநாதர் என்றும் அழைக்கப்படும் இத்திருக்கோயில் காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது. ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம் இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால்...

தல பெருமை

காஞ்சிபுரம் நகரில் உயர்ந்த கோபுரம் கொண்ட திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம் ஆகும். சங்கரமடம் வெகு அருகிலமைந்துள்ளது. ஏகம் ஆம்பரம் (ஒற்றை மாமரம்) தல விருட்சமாகக் கொண்ட திருக்கோயில் இதுவாகும். அத்தலவிருட்சத்தினடியில் ஏகாம்பரநாதரை ஏலவார் குழலி அம்மை கைப்பிடித்ததனால் மாவடி என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு திருமணமும் மாவடியில் நடப்பது சிறப்பெனக் கருதி அங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன. தெற்கு ராஜ கோபுரம், பல்லவ கோபுரம், மேற்கு கோபுரம் என மூன்று ராஜ கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். தெற்கு ராஜ கோபுரம் கிருஷ்ணதேவராயரபால் கட்டப்பட்டதாகும். பிருதிவி (பூமி, மண்) தலம் என்று பஞ்சபூதத்தலங்களில் காஞ்சி தனித்து பெயர் பெறுகிறது. கிழக்குத் திசை நோக்கி இருக்கும் ஏகாம்பரநாதர் சன்னதியில் மணல் லிங்கம் உள்ளது. கருவறை பிற்காலப்...