தல வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம் , தரங்கம்பாடி வட்டத்திலிருந்து ,கிடாரண்கொண்டான் பேருந்து சாலையில் செம்பனார்கோயிலில் இருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கிடாரண்கொண்டான் கிராமம் , மேற்படி கிராமத்தில் பொன்செய் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அப்பர் , சுந்தரர் திருஞானசம்பந்தர் என மூவரால் பாடல்பெற்ற இஸ்தலமாகும் .மேலும் திருமணக்கோலத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் அம்மனுடன் எழுந்தருளியுள்ளார் .மேலும் திருஞானசம்பந்தர் தாயார் அவதரித்த ஊராகும் .இத்திருக்கோயில் 11 ம் நூற்றாண்டை சார்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் 2001 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றுள்ளது .