தல வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம் , தரங்கம்பாடி வட்டம் , செம்பனார்கோவில் இருந்து திருநள்ளாறு செல்லும் பேருந்து சாலையில் 9 கிமீ தொலைவில் திருவிளையாட்டம் கிராமத்தில் அமைந்துள்ளது. மேலும் கிராமத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவாய் உருவாய் உருவானதால் இவருக்கு சுயம்புநாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று. ஆரம்ப காலத்தில் பெருமூளை கிராமம் என அழைக்கப்பட்ட அந்த கிராமம் தற்போது திருவிளையாட்டம் என பெயர் மருவி வழங்கப்படுகிறது. இத்திருக்கோயில் சோழ மன்னரால் கட்டப்பட்ட மாடக்கோயிலாகும். இத்திருக்கோயில் 2003 ம் ஆண்டு ஜூலை மாதம் 10 ம் நாள் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.