தல வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்லும்வழியில் 14 கிமீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.திருக்கோயில் கட்டப்பட்ட காலம் 13 ம் நூற்றாண்டு பிற்கால சோழர்களின் காலத்தில் கட்டப்பட்டது. மேலும் தாயாருக்கான சன்னதி மற்றும் மண்டபங்கள் 17 மற்றும் 18 ம் நூற்றாண்டில் மராத்தியர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலில்2005 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.