நாகப்பட்டினம் மாவட்டம் , தரங்கம்பாடி வட்டத்தில் , மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் பேருந்து சாலையில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மேலப்பாதி கிராமம். நீண்ட காலம் முன்பாக பூம்புகார் வணிகத்திற்காக சோழமன்னர் ஒருவர் செல்லும் வழில் கடுமையான விஷ ஜுரம் வந்து பாதிக்கப்பட்டதால் இந்த கிராமத்திலேயே உள்ள சிவன்கோயிலில் தங்கி வழிபாடு செய்த காரணத்தினால் மன்னருக்கு ஏற்பட்ட விஷ ஜுரம் நீங்கியது . அன்று முதல் இத்தளத்தில் உள்ள இறைவனுக்கு ஜுரஹரேஸ்வரர் என பெயர் வழங்கலாயிற்று. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது . மேலும் மராத்தியர்கள் காலத்தில் மண்டபங்களும் , மதில் சுவரும் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் 2003...நாகப்பட்டினம் மாவட்டம் , தரங்கம்பாடி வட்டத்தில் , மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் பேருந்து சாலையில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மேலப்பாதி கிராமம். நீண்ட காலம் முன்பாக பூம்புகார் வணிகத்திற்காக சோழமன்னர் ஒருவர் செல்லும் வழில் கடுமையான விஷ ஜுரம் வந்து பாதிக்கப்பட்டதால் இந்த கிராமத்திலேயே உள்ள சிவன்கோயிலில் தங்கி வழிபாடு செய்த காரணத்தினால் மன்னருக்கு ஏற்பட்ட விஷ ஜுரம் நீங்கியது . அன்று முதல் இத்தளத்தில் உள்ள இறைவனுக்கு ஜுரஹரேஸ்வரர் என பெயர் வழங்கலாயிற்று. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது . மேலும் மராத்தியர்கள் காலத்தில் மண்டபங்களும் , மதில் சுவரும் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் 2003 ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது .