Screen Reader Access     A-AA+
அருள்மிகு சாந்தாரைக்காத்த சுவாமி திருக்கோயில், Thilaiyadi - 609310, மயிலாடுதுறை .
Arulmigu Saarntharaikathaswamy Temple, Thilaiyadi - 609310, Mayiladuthurai District [TM018233]
×
Temple History

தல வரலாறு

தலவரலாறு புராணவரலாறு ஓர் முறை ஹிரன்யாசுரன் எனும் அசுரன்தீவிர சிவ பக்தனாகவும் விளங்கினான் முனிவர்களையும், தேவர்களையும் சிரமம்படுத்திக் கொண்டு இருந்தான் இதனால் தேவர்கள் மகாவிஷ்னுவிடம் வேண்டுகின்றனர். உடன் மஹாவிஷ்னுவும் ஹிரன்யாசுரனை அழித்து தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். மஹாவிஷ்னு ஹிரன்யாசுரனை கொன்று பாவம் தீர்ப்பதற்காக இத்திருத்தலத்தில் சிவனை சரணாகதி அடைத்து விமோசனம் அடைந்தார். அன்றிலிருந்து சரணாகத ரட்சகராக இங்கு எல்லோருக்கும் அருள்பாலிக்கின்றார். மஹாவிஷ்னு இத்திருத்தலத்தில் சங்கர நாராயணனாக காட்சி அளிக்கிறார். சனீஸ்வரன் அணுக்கிரஹ சனீஸ்வரன்சனீஸ்வரன் இத்தலத்தில் அணுக்கிரஹ சனீஸ்வரனாக தனி சன்னதியில் நின்றபடி கிழக்கு நோக்கி நின்றபடி பக்தர்களுக்கு அருள் பாளிக்கின்றார்். இத்தலத்தில் இருக்கும் சனீஸ்வரன் திருநள்ளாரில் இருக்கும் சனீஸ்வரனைப் போன்று ஓத்த அமைப்பை உடையவர். இவ்விரு தளங்களிலும் தனி சன்னிதி அமையப் பெற்று அருள் பாளிக்கின்றார் மற்றும்...

தல பெருமை

சோழர் கால வரலாறு இத்திருத்தலம் 13 மற்றும் 15 ஆம் நூற்றாண்டு காலங்களில் தஞ்சையை ஆண்ட சோழர்களால் புணரமைக்கப்பட்டது. திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேசர் கோவிலும் தில்லையாடி ஸ்ரீ சரணாகத ரட்சகர் கோவிலும் சமகால திருப்பணி. மன்னன் விக்கரமசோழன் ஓர் சமயம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலை புதுப்பிக்க வேண்டி அமைச்சர் இளங்காரரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இளங்காரரும் அப்பணியை செய்வனே செய்து வந்தார். அப்போது பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்வையிட தில்லையாளி நல்லூர்தில்லையாடி வழியாக சென்றார். அப்போது தில்லையாடியில் சிதிலமடைந்த நிலையில் இருந்த கோவிலை திருப்பணி செய்து முடித்தார் அங்கிருந்தபடியே செயலில் இறங்கினார். திருக்கடையூர் கோவில் கட்டுமான பணிக்கு போக மிதமுள்ள...