Arulmigu Viswanathaswamy Temple, Ozhugimangalam, Erukattanchery - 609307, Mayiladuthurai District [TM018280]
×
Temple History
தல வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம்,மயிலாடுதுறையில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் , தரங்கம்பாடியில் மேற்கே 2 கிமீ தொலைவிலும இத்திருக்கோயில் அமைந்துள்ளது.ஒழுகைமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் தேவ சர்மா என்ற அந்தணர் ஆதி சைவர் வம்சத்தில் வந்த தீவிர சிவ பக்தராவார். இவரது கனவில் ஈசன் தோன்றி காசிக்கு வர கட்டளையிட அதன் பேரில் தன்னுடன் நான்கு சிவாச்சாரியார்களையும் அழைத்துக்கொண்டு காசி சென்றார்.அங்கு கங்கையில் நீராடி அனுஷ்டானங்களை முடித்து கொண்டு திருக்கோயிலுக்கு சென்று அருள்மிகு விஸ்வநாதர் சன்னதியில் மனமுருகி வழிபாடு செய்ய சிவனருளால் ஒரு அந்தண சிறுவன் தோன்றி ஐந்து சிவலிங்கங்களை கொடுத்து...நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம்,மயிலாடுதுறையில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் , தரங்கம்பாடியில் மேற்கே 2 கிமீ தொலைவிலும இத்திருக்கோயில் அமைந்துள்ளது.ஒழுகைமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் தேவ சர்மா என்ற அந்தணர் ஆதி சைவர் வம்சத்தில் வந்த தீவிர சிவ பக்தராவார். இவரது கனவில் ஈசன் தோன்றி காசிக்கு வர கட்டளையிட அதன் பேரில் தன்னுடன் நான்கு சிவாச்சாரியார்களையும் அழைத்துக்கொண்டு காசி சென்றார்.அங்கு கங்கையில் நீராடி அனுஷ்டானங்களை முடித்து கொண்டு திருக்கோயிலுக்கு சென்று அருள்மிகு விஸ்வநாதர் சன்னதியில் மனமுருகி வழிபாடு செய்ய சிவனருளால் ஒரு அந்தண சிறுவன் தோன்றி ஐந்து சிவலிங்கங்களை கொடுத்து இதை பிரதிஷ்டைசெய்து ஒரே நாளில் தரிசனம் செய்தால் காசிக்கு வந்த பலன் உண்டு என்று சொல்லி அந்த அந்தண சிறுவன் மறைந்து விட்டார். தேவசர்மாவும் அகமகிழ்ந்து தன் ஊருக்கு வந்து ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் உருவமாக முதலில் ஒழுகைமங்கலத்திலும் ஒழுகைமங்கலத்திற்கு வட கிழக்கே கொட்டுபாளையம் என்ற ஊரிலும் ,ஒழுகைமங்கலத்திற்கு தென் கிழக்கே பொறையார் என்ற ஊரிலும், ஒழுகைமங்கலத்திற்கு தென் மேற்கே தேவனூர் என்ற ஊரிலும் ஒழுகைமங்கலத்திற்கு வட மேற்கே தில்லையாடி என்ற ஐந்து ஊர்களிலும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள். இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாக செவி வழிச் செய்தி மூலம் அறியவருகிறது . இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் கொட்டுபாளையம் , பொறையார்,தேவனூர்,தில்லையாடி ஆகிய நான்கு ஊர்களிலும் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் ஒழுகைமங்கலத்தில் மட்டும் மேற்கு நோக்கி சுவாமி சன்னதி அமைந்துள்ளது தனி சிறப்பாகும் . ஒருவருடைய ஜென்ம நட்சத்திரத்தில் இந்த 5 திருத்தலங்களையும் ஒரே நாளில் வழிப்பட்டால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் .