அருள்மிகு சர்வசக்தி மாரியம்மன் திருக்கோயில், சுவாமிமலை, Swamymalai - 612302, தஞ்சாவூர் .
Arulmigu Sarvasakathimariyamman Temple, Swamimalai, Swamymalai - 612302, Thanjavur District [TM018291]
×
Temple History
தல பெருமை
சோழ வள நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கோயில் பெருநகரமான கும்பகோன மாநகரத்தில் காவேரிக்கரைக்கு வடக்கே சுவாமிமலை இராஜவீதிக்கு வடக்கே அருள்மிகு ஸ்ரீசர்வசக்தி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஸ்ரீ சர்வசத்தி மாரியம்மன் கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சியளித்து, அருள் பாலிக்கிறார். மகாமண்டபத்தின் முன் தென்கிழக்கே ஸ்ரீ விநாயகர் சன்னதி, தெற்கு பிரகாரத்தில் ஸ்ரீ காளியம்மன் சன்னதி, வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் சன்னதி, மதுரை வீரன் சன்னதி ,அம்மன் சன்னதி முன்பு பலிவிடம் அமைந்துள்ளது. காலரா, அம்மை போன்ற கொடிய நோய்களிலிருந்தும், கண் மற்றும் உடற்கூறுகளில் ஏற்படுமூ கோளாறுகள் இவற்றை எல்லாம் நீக்கும் அருட்பேராற்றல் ஸ்ரீ சர்வசக்தி மாரியம்மனுக்கு உண்டு. மனப்பிணிகள் திர்க்கவருவாரும் மனவினை போக்கு நாடி வருவாரும் திருமண...சோழ வள நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கோயில் பெருநகரமான கும்பகோன மாநகரத்தில் காவேரிக்கரைக்கு வடக்கே சுவாமிமலை இராஜவீதிக்கு வடக்கே அருள்மிகு ஸ்ரீசர்வசக்தி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஸ்ரீ சர்வசத்தி மாரியம்மன் கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சியளித்து, அருள் பாலிக்கிறார். மகாமண்டபத்தின் முன் தென்கிழக்கே ஸ்ரீ விநாயகர் சன்னதி, தெற்கு பிரகாரத்தில் ஸ்ரீ காளியம்மன் சன்னதி, வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் சன்னதி, மதுரை வீரன் சன்னதி ,அம்மன் சன்னதி முன்பு பலிவிடம் அமைந்துள்ளது. காலரா, அம்மை போன்ற கொடிய நோய்களிலிருந்தும், கண் மற்றும் உடற்கூறுகளில் ஏற்படுமூ கோளாறுகள் இவற்றை எல்லாம் நீக்கும் அருட்பேராற்றல் ஸ்ரீ சர்வசக்தி மாரியம்மனுக்கு உண்டு. மனப்பிணிகள் திர்க்கவருவாரும் மனவினை போக்கு நாடி வருவாரும் திருமண தடை உள்ளோரும், குழந்தை வரம் வேண்டி நிற்பாரும் ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் அருளைப் பெறலாம். பக்தர்களின் குறைகளைத் தீர்த்து பாவச் சுமைகளை நீக்கி, அடியார்களின் உள்ள கோயிலே கொலுவிற்றிருக்கிறாள். மழை பொழி விற்கும் நிலவிளைச்சலுக்கும் இவளுடைய அருட்பார்வை அவசியமானதாகும். கேட்டவர்க்கு கேட்டவரம் நல்கும் ஸ்ரீ சர்வ சக்திமாரியம்மன் தீராத வழக்குகளை தீர்த்து வைப்பாள், மருத்துவர்கள்கைவிட்ட நோயாளிகள் நலம் பெறுவர். வேண்டிய வரங்களை வாரிவழங்குகிறாள். கற்றார்க்கும் நல்யாற்கும் உள்ளார்க்கும் இல்லாற்கும் ஒப்புயர்வற்ற அன்னையாக அருள்பாலிக்கின்றாள். வினைகள் நீங்கவும் வறுமை நீங்கவும் அன்னையைப் போற்றுவர்கள். அன்னையின் அருள் வரம் பெறலாம்.