புராண பின்புலம்
சமணர்கள் சிவாலயத்தை மறைத்து மண்ணால் ஆன பெரிய பொந்துகளை அமைத்து வசித்தமையால் முழையூர் எனப்பட்டது. திருமலைராஜன் ஆற்றங்கரை அவ்வப்போது உடைந்த போது அக்கரையை காக்கும் தெய்வமாக ஐய்யனாரை பிரதிஷ்டை செய்தனர். வெள்ளைக் குதிரையில் இவ்வய்யனார் வீதியில் நகர் வலம் வருவதாக நம்பப்படுவதால் இவர் கரைமேல் அழகர் ஐய்யனார் எனப்பட்டார். எல்லா ஆலயங்களில் உள்ளது போலவே இவரும் பூரணை, புஷ்கலை எனும் இரு தேவியருடன் அருள்பாலிக்கிறார்.