தல பெருமை
இத்திருக்கோயிலின் புராண வரலாறு அருகாமையில் உள்ள நாச்சியார்கோயில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலுடன் தொடர்புடையதாக உள்ளது. இத்திருத்தல நாயகன் அப்பன் பெருமாள் நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் நடந்த திருமண வைபவத்தில் சீனிவாசப்பெருமாளின் தகப்பனாராக அப்பன் ஸ்தானத்திலிருந்து திருமண நிகழ்வை நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.எனவேதான் ஸ்ரீவேஙகடேசபெருமாள் அப்பன் சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.