தல பெருமை

அருள்மழை பொழியும் செல்வமாகாளியம்மன் இவ்வூரில் கோயில் கொண்டிருந்தார். காடுமலை கடந்து அருள்மிகு அய்யனார் உலாவந்தபோது பெருமழை பெய்தது. இவ்வூரின் அருகிலிருந்து செல்வமாகாளிகோயிலுக்கு சென்று அய்யனார் ஒண்டினார். உள்ளே வந்த அய்யனார் செல்வமாகாளியை உடையாளூருக்கு அனுப்பி தானே நிரந்தரமாக இவ்வூரில் கோயில் கொண்டதால் ஒட்டியிடங்கொண்ட அய்யனார் என்று அழைக்கப்பட்டார்.