தல வரலாறு

அருள்மிகு அப்பன் வெங்கடேச பெருமாள் ஆதியில் சயனக்கோலத்தில் இருந்தார் பின்பு மன்னன் தொண்டை மான் சக்கரவர்த்திக்காக திருப்பதியில் இருப்பதை பொன்று நின்ற கோலத்தில் காட்சி தந்தார் திருப்பதி சங்கு சக்கரம் இங்கு இருப்பதாக ஐதிகம் மேலும் இத்திருக்கோயில் பாலாறு செய்யாறு வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் திருக்கோயில் அமைந்திருப்பது மிக சிறப்பு அம்சமாகும்