


தல பெருமை
எம். எம். டி. ஏ. பெயர்க்காரணம் மெட்ராஸ் மெட்ரோ டெவெலப்மென்ட் அதாரிட்டி என்பதன் சுருக்கமே எம். எம். டி. ஏ சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தமிழ்நாட்டில் முதன் முறையாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வாயிலாக வீட்டு மனை வழங்கும் திட்டத்தின் கீழ் எம். எம். டி. எ. காலனி 1970- ம் ஆண்டு உருவானது.ஆகையால் எம். எம். டி. ஏ . என்ற உடன் மக்கள் நினைவுக்கு வருவது இவ்வூரே. அரும் என்ற வார்த்தை அருகம்புல்லை குறிப்பதாக அமையும். முன்னோர் காலத்தில் தற்போதைய அரும்பாக்கத்தில் அருகம்புல் நிறைந்து இருந்த காரணத்தாலும் மக்களும் வாழ்ந்த இடங்கள் எல்லாம் பாக்கம் என்று அழைப்பது உண்டு. ஆகையால் அரும்பாக்கம் என்ற பெயர் பெற்று...எம். எம். டி. ஏ. பெயர்க்காரணம் மெட்ராஸ் மெட்ரோ டெவெலப்மென்ட் அதாரிட்டி என்பதன் சுருக்கமே எம். எம். டி. ஏ சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தமிழ்நாட்டில் முதன் முறையாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வாயிலாக வீட்டு மனை வழங்கும் திட்டத்தின் கீழ் எம். எம். டி. எ. காலனி 1970- ம் ஆண்டு உருவானது.ஆகையால் எம். எம். டி. ஏ . என்ற உடன் மக்கள் நினைவுக்கு வருவது இவ்வூரே. அரும் என்ற வார்த்தை அருகம்புல்லை குறிப்பதாக அமையும். முன்னோர் காலத்தில் தற்போதைய அரும்பாக்கத்தில் அருகம்புல் நிறைந்து இருந்த காரணத்தாலும் மக்களும் வாழ்ந்த இடங்கள் எல்லாம் பாக்கம் என்று அழைப்பது உண்டு. ஆகையால் அரும்பாக்கம் என்ற பெயர் பெற்று பின்னர் இதுவே அரும்பாக்கம் என நிலைபெற்று இருக்கிறது. அரும்பாக்கம் கிராமமாக இருந்துள்ளது. கோயில் - கோ இல் - கோ என்றால் இறைவன் இல் என்றால் வீற்றிருக்கும் இடம் என்று பொருள். ஆக இறைவன் வீற்றிருக்கும் இடமே கோயில் என்று அழைக்கப்படுகிறது. டெம்புல் என்ற ஆங்கில சொல் டெம்புலம் என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. டெம்புலம் என்ற சொல்லுக்கு புனித இடத்தை குறிக்க்கின்ற சொல்லாகும். இந்துக்களின் சமூக வாழ்க்கையில் பிரதான அங்கமாக விளங்குவது ஆலயம் ஆகும் ஆலயம் என்ற சொல்லை ஆ லயம் என்று பிரிக்கலாம்.ஆ என்பதற்கு ஆன்மா என்று பொருள் லயம் என்றால் சேருவதற்குரிய இடம் என்று பொருள்.ஆன்மா லயிப்பதற்குரிய இடத்தையே ஆலயம் என்று கூறினார்கள். எல்லா இடங்களிலும் தெய்வம் உண்டு தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றால் கோயில் எதற்கு என்ற எண்ணமும் எந்த இடத்திலும் இறைவனை வழிபடலாம் என்ற எண்ணம் அனைவரும் மனதில் தோன்றுவது இயற்கையே. இருப்பினும் பூமியின் அடியில் தண்ணீர் வியாபித்து இருந்தாலும் இரு இடத்தில் கிணறை வெட்டி அந்த நீரை நாம் பயன்படுத்துவது போல இறைவன் எங்கு வியாபித்து இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில கோயிலை கட்டி அங்கே இறைவனை வழிபடுவதே சாலை சிறந்தது. கோவில் அமைவிடம் - சென்னையில் இருந்து பூவிருந்தவல்லி செல்லும் சாலை வழியாக என். எஸ் கே நகரில் இருந்து இடதுபுறம் ஒரு கிலோமீட்டர் சென்றால் எம். எம். டி. ஏ வை அடையலாம்.மேலும் கோயம்பேட்டில் இருந்து வடபழனி செல்லும் 100 அடி சாலை வழியாக இடதுபுறம் வந்தாலும் இவ்வூரை அடையலாம் . எம். எம். டி. ஏ நகர் பிரதான சாலையில் ஹெச் 147 என்ற இலக்கத்தில் அமைந்துள்ளது உயர்ந்த சுற்றுச் சுவராலும் உயர்ந்து நிற்கும் ராஜகோபுரம் கொடிமரம் அழகான கதை சிற்பங்களும் இவ்வழியே செல்வோரை திரும்பி பார்க்கும் வண்ணமாய் இத்திருக்கோயில் அமைந்துள்ளது . திருக்கோயில் உருவான வரலாறு திருக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வேறு ஒரு திட்டத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. அனால் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என் எண்ணிய மக்கள் கோயில் அமைக்க எண்ணி அம்மன் சிலை வைத்து சிறிய குடில் அமைத்து வணங்கி வந்தனர் .சில நாட்களில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் இந்த இடத்தில ஆலயம் அமைத்தது தவறு என்றும் இதனை இடிக்க வேண்டும் என்று கூறினர். ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர் பொதுமக்களும் அதிகாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அங்கிருந்த பொதுமக்கள் சிலருக்கு அருள் வந்து நான் இங்குதான் இருப்பேன் என்றும் ஆலயம் இவ்விடத்தில் தான் அமைய வேண்டும் எனவும் அருளுரைத்தனர். அதை கேட்ட பொதுமக்களும் இதுவே சரியான இடம் என்று அதிகாரிகளிடம் கேட்டு இந்த இடத்தினை ஆலயத்திற்கே ஒதுக்குமாறு கோரிக்கை வைத்ததின் பேரில் இந்த இடத்திலேயே முத்துமாரியம்மன் ஆலயம் உருவானது .பொதுமக்கள் ஆலயத்தினை சற்று விரிவுபடுத்தி 14.02.1980 ம் ஆண்டு கும்பாபிஷேகத்தையும் நடத்தினார்கள்.1985- ம் ஆண்டில் அண்ணாமலை என்ற வயது முதிர்ந்த அர்ச்சகர் தன்னுடைய இரு கண்களும் பார்வையில்லாமல் இருந்த போது தினந்தோறும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து செம்பருத்தி பூக்களை அம்மன் சிரசில் வைத்து தன்னுடைய கண்களில் வைத்து ஒத்திக்கொண்டு வந்தார். சில நாட்களில் அண்ணாமலை அர்ச்சகருக்கு அம்மன் அருளால் கண்பார்வை திரும்ப கிடைத்தது. இதற்கு சான்று கோவில் கல்வெட்டிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது அதற்கு பிறகு சுமார் பத்து ஆண்டுகளாக இத்திருக்கோவிலேயே அர்ச்சகராக சேவையாற்றி வந்தார். கும்பாபிஷேகம் - 14.02.1980 - ம் ஆண்டு அருள்மிகு முத்துமாரிஅம்மன் திருக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது . 1984- ம் ஆண்டு ஸ்ரீ வரசித்தி விநாயகர் சன்னதி நிறுவி அருள்மிகு முத்துமாரியம்மன் சன்னதிக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் சன்னதிக்கும் மஹா கும்பாபிஷேகம் 20.04.1984 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஊர் பொதுமக்களால் நடத்தப்பட்டது. மேலும் பொதுமக்களின் முயற்சியால் ஆலயம் விரிவுபடுத்தப்பட்டு நவகிரகங்களை அமைத்து ஆவணி மாதம் 18 ம் தேதி 03.09.1989 -ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தில் அனைத்து தெய்வங்களும் இடம் பெற்று இருக்க வேண்டும் என் எண்ணிய பொதுமக்கள் ஆலயத்தில் வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்ரீ லட்சுமி நாராயணன் ஸ்ரீ இஷ்டலிங்கேஸ்வரர் ஸ்ரீ ஆதிபராசக்தி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய பெருமாள் ஸ்ரீ நாகர் ஆகிய தெய்வங்களின் சன்னதிகளை அமைத்து நூதன மஹா கும்பாபிஷேகம் மாசி மாதம் 23- ம் தேதி 07.03.1991 வியாழக்கிழமை அன்று அனுஷா நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள்ளாக நடைபெற்றது. ஆகம விதிகளின்படி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என் எண்ணிய பொதுமக்கள் கும்பாபிஷேகத்தினை கீழ்க்கண்ட விவரப்படி நடத்தினர். விஷு வருஷம் ஆனி மாதம் 28- ம் தேதி 12.07.2001 வியாழக்கிழமை சப்தமி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 8.30 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் மஹா கும்பாபிஷேகம் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. பிரதான தெய்வமான முத்துமாரியம்மன் ஆலயத்தினை தவிர்த்து அனைத்து ஆலய சன்னதிகளும் புதியதாக கட்டப்பட்டு மேலும் ஸ்ரீ கால பைரவர் நிறுவப்பட்டு ஆகம விதிகளின்படி ஆலயத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டு 23.01.2015- ம் ஆண்டு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.05 மணிக்குள்ளாக ஊர் பொதுமக்கள் இணைந்து கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாகவும் சீரோடும் நடத்தினர். மற்ற ஊர் மக்களின் பாராட்டையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாதாந்திர பூஜைகள் விநாயகர்- சங்கடஹர சதுர்த்தி அம்மன்- பௌர்ணமி திருவிளக்கு பூஜை சிவன்- இரண்டு பிரதோஷம் முருகன்- கிருத்திகை வேல்மாறல் பூஜை பைரவர்- தேய்பிறை அஷ்டமி வருடாந்திர சிறப்பு பூஜைகள் சித்திரை- தமிழ் வருட பிறப்பு சித்திரை பௌர்ணமி திருவிளக்கு பூஜை வைகாசி- வைகாசி விசாகம் முருகருக்கு அபிஷேகம் ஆடி- ஆடி மாதம் மூன்றாவது வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நான்காவது வாரம் காப்பு கட்டுதல் பூக்கிரகம் வீதி உலா கூழ்வார்த்தல் அம்மன் வீதி உலா வெகு விமர்சையாக நடைபெறும். ஆவணி- விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் 1008 கொழுக்கட்டைகள் படையலுடன் விஷேச தீபாராதனை புரட்டாசி- புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக சிறப்பு அலங்காரம் விஷேச தீபாராதனை நடைபெறும். மேலும் நான்காவது வாரம் பெருமாளுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு நவராத்திரி திருவிழா இசைக்கச்சேரி சொற்பொழிவு ஆகியவற்றுடன் தினமும் சிறப்பாக நடைபெறும். ஐப்பசி- ஆறு நாட்கள் முருகருக்கு கந்த சஷ்டி லட்சார்ச்சனை ஏழாம் நாள் முருகருக்கு திருக்கல்யாண வைபவம் சீர் வரிசையோடு சீரோடும் சிறப்போடும் வெகு விமர்சையாக நடைபெறும் பௌர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். கார்த்திகை- ஐயப்ப சுவாமிக்கு பந்தளம் அமைத்து செண்டை மேளத்துடன் திருவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெறும். மார்கழி- வைகுண்ட ஏகாதசி பெருமாளுக்கு சிறப்பாக நடைபெற்று பெருமாள் திருவீதி உலா நடைபெறும் அனுமன்ஜெயந்தி விழாவும் நடைபெறும். தை- தைப்பொங்கல் திருவிழாவும் முருகருக்கு தைப்பூசம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாசி- சிவராத்திரியில் சிவனுக்கு நான்கு கால பூஜைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலம் நடைபெறும். பங்குனி- பங்குனி உத்திரத்தில் முருகருக்கு 1008 பால்குடம் ஊர்வலம் வந்து முருகருக்கு பாலபிஷேகம் நடைபெறும் முருகர் திருவீதி உலா நடைபெறும். நடை திறப்பு காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விஷேச நாட்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது
