Arulmigu Jambugeswarar Temple, Vaigal, Vaigal - 612201, Mayiladuthurai District [TM019283]
×
Temple History
தல வரலாறு
திருவைகல் மாடக்கோயில் தலச்சிறப்புகள்
இத்தலம் மயிலாடுதுறை கும்பகோணம் இருப்பு பாதையில் ஆடுதுறை புகைவண்டி நிலையத்திற்கு தெற்கே 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் பேருந்துகளில் ஏறி பழியஞ்சியநல்லூரில் இறங்கி நாட்டார் வாய்காலைக் கடந்து தெற்கே 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களில் இது 33-வது தலம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவைச் சார்ந்தது இக்கிராமம் வைகல் என்பது ஊர்பெயர் வைகல் என்னும் ஊரில் மாடக்கோயில் அமைப்பில் விளங்குவதால் இத்தலம் வைகல் மாடக்கோயில் என வழங்கப்படுகிறது. வை-குறுமை, கல்-மலை சிறிய மலைபோல் அமைந்த செய்குன்றின்மேல் அமைந்த மாடக்கோயில் என்பது இத்தலப்பெயரின் பொருளாகலாம்....திருவைகல் மாடக்கோயில் தலச்சிறப்புகள்
இத்தலம் மயிலாடுதுறை கும்பகோணம் இருப்பு பாதையில் ஆடுதுறை புகைவண்டி நிலையத்திற்கு தெற்கே 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் பேருந்துகளில் ஏறி பழியஞ்சியநல்லூரில் இறங்கி நாட்டார் வாய்காலைக் கடந்து தெற்கே 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களில் இது 33-வது தலம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவைச் சார்ந்தது இக்கிராமம் வைகல் என்பது ஊர்பெயர் வைகல் என்னும் ஊரில் மாடக்கோயில் அமைப்பில் விளங்குவதால் இத்தலம் வைகல் மாடக்கோயில் என வழங்கப்படுகிறது. வை-குறுமை, கல்-மலை சிறிய மலைபோல் அமைந்த செய்குன்றின்மேல் அமைந்த மாடக்கோயில் என்பது இத்தலப்பெயரின் பொருளாகலாம்.
தமிழ்நாட்டில் முடிமன்னர்களும், குறுநில மன்னர்களும் மதியமைச்சர்களும், சேனாதிபதிகளும், முனிவர்களும் எடுத்த கோயில்கள் பல, அவற்றுள் இக்கோயில் சோழ மன்னர்களில் கோச்செங்கோட்சோழன் கட்டிய திருக்கோயிலாகும். முற்பிறவியல் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனை வழிபட்டு இறையருளால் அரசனாக பிறக்கும் பேறு பெற்றவர் இம்மன்னர். அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் பெறுபவர் முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த தொண்டுக்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக்கோயில்கள் பலவற்றை இம்மன்னர் கட்டினார். எண்தோள் ஈசற்க்கு எழில்மாடம் எழுபது செய்தார் என்று திருமங்கையாழ்வார் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளார். கோச்செங்கட் சோழரால் வைகல் மாடக்கோயில் கட்டப்பெற்றது என்பதை இத்தலத் தேவாரத் திருப்பதிகத்துள் திருஞானசம்பந்தர்.
மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மைகண் மலைமக ளொடும் வைகிடம்
வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.
கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய(து) உரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே
என்ற பாடல்களால் தெளிவாக அருளிச் செய்கின்றார்.