Arulmigu Renugambalamman Temple, Near Panchayat Office, A.K.Padavedu - 606905, Tiruvannamalai District [TM020374]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாய் பிறந்து ஜமதக்கனி முனிவரை மணம் முடித்து பரசுராமர் உள்ளிட்ட நன்மக்களைப்பெற்றெடுத்தாள். ரேணுகாதேவி தன் கணவருக்குப்பணிவிடை செய்து வரும் நாளில், கணவர் பூஜைக்கு நீர் முகந்திட கமண்டல நதிக்கு சென்றாள், அச்சமயம் வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவனழகையும், இளமையையும் எண்ணி ஆச்சரியப்பட நீரில் மட்குடம் உடைந்து அத்தண்ணீரால் ரேணுகாதேவின் உடல் முழுவதும் நனைந்த்தை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபங்கொண்டு தன் மகன் பரசுராமனை அழைத்து அன்னையின் சிரசைத்துண்டிக்க ஆணையிட அதன்படி மகன் அன்னையை சிரச்சேதம் செய்கிறார். பின் தந்தையிடம் வந்த தங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் எனவும், தாங்கள் கோபத்தை அடக்கி தயை செய்ய வேண்டும் என்றும், பெற்ற தாயை...அருள்மிகு ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாய் பிறந்து ஜமதக்கனி முனிவரை மணம் முடித்து பரசுராமர் உள்ளிட்ட நன்மக்களைப்பெற்றெடுத்தாள். ரேணுகாதேவி தன் கணவருக்குப்பணிவிடை செய்து வரும் நாளில், கணவர் பூஜைக்கு நீர் முகந்திட கமண்டல நதிக்கு சென்றாள், அச்சமயம் வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவனழகையும், இளமையையும் எண்ணி ஆச்சரியப்பட நீரில் மட்குடம் உடைந்து அத்தண்ணீரால் ரேணுகாதேவின் உடல் முழுவதும் நனைந்த்தை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபங்கொண்டு தன் மகன் பரசுராமனை அழைத்து அன்னையின் சிரசைத்துண்டிக்க ஆணையிட அதன்படி மகன் அன்னையை சிரச்சேதம் செய்கிறார். பின் தந்தையிடம் வந்த தங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் எனவும், தாங்கள் கோபத்தை அடக்கி தயை செய்ய வேண்டும் என்றும், பெற்ற தாயை வெட்டி என் கையையும் வெட்டி விட்டேன், என்று கூறிய மகனிடம், வேண்டிய வரம் தருவதாக முனிவர் கூறினார், பரசுராமரோ பெற்ற தாயை மீண்டும் உயிர்ப்பித்துத்தர கோருகிறார், அவரும் மகன் விருப்பதிற்கிணங்கி கமண்டல நீரை மந்திரித்துக்கொடுக்க ,அவர் அதை பெற்றுக்கொண்டு தன் தாய் வெட்டுப்பட்ட இடத்திற்கு சென்று காலகதியால் அங்கே வெட்டுப்பட்டுக்கிடக்கின்ற சண்டாளச்சி உடலில் தவறுதலாக ரேணுகாதேவியின் தலையை ஒட்டும்படி வைத்து நீரை தெளித்தவுடன் அன்னை சண்டாளப்பெண்ணின் உடம்போடு பிழைத்து நின்று தன் புல்ல்வனை பார்த்து தனக்கு நேர்ந்த வேறுபாட்டை கூறினாள். பின் தன் தந்தையின் முன்சென்று நடந்தவற்றை விவரிக்கிறார். இது தெய்வச்செயலால் வந்தது. இனி இதை மாற்ற முடியாது எனக்கூறியதனால் அது முதல் அவ்வேறுபட்ட உடலுடன் ஜமதக்கனி முனிவருக்கு அன்னை பணிவிடை செய்து வரும் நாளில் அங்கு வந்த கார்த்தவீரிய அர்ச்சுனன் ஜமதக்கனி முனிவரிடமிருந்த காமதேனுவை தனக்கு வழங்க வேண்டுகிறான், முனிவர் வழங்க மறுத்ததால், அவரைக்கொன்று காமதேனுவை கார்த்தவீரிய அர்ச்சுன்ன் அழைத்துச்சென்று விடுகிறான். கணவர் இறந்ததால் ரேணுகாதேவி கணவர் உடலுடன் உடன் கட்டை ஏறினாள், அவ்வமயம், தெய்வ வசத்தால் மழை பொழிந்த்து. அம்மழை நீரால் சுடலை நெருப்பு அணைத்து அன்னை கொப்புளங்களுடன் ஆடை இன்றி எழுந்து வேப்பிலை ஆடையைக்கட்டிக்கொண்டு மகன் பரசுராமனைச்சந்தித்தாள், உடனே பரசுராமர் வந்த மிக்க கோபத்துடன் சென்று கார்த்தவீரியனைக்கொன்று சினத்துடன் திரும்ப, ஷத்திரிய குலம் முழுவதும் அழிக்க சாபமிடுகிறார். இதனைக்கண்ட சிவபெருமான், பிரம்மா, விஷ்ணுவுடன் தேவர்களோடு, அவ்விடம் தோன்றி, கோபத்தை விட்டுவிடும்படியும், இக்காரியம் விதிப்பயனாலானது என்றும் யாராலும் தடுக்க முடியாது எனக்கூறி சாந்தப்படுத்தினார்கள், பின்னர் ஜமதக்கனி முனிவரைச் சிவபெருமான் உயிர்ப்பித்தெழச்செய்தனர். அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டிய படி சிரசு மட்டும் பிரதானமாகக்கொண்டு இப்பூலகில் பூஜைக்கருவுருவாய் விளங்கவும், உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சுவர்க்கத்திற்குச்செல்லவும் சிவபெருமான் அருள் வழங்கினார்.
அவ்வாறே அன்னை ரேணுகாதேவி பூவுலகில் சிரசைப்பிரதானமாகக்கொண்டு படைவீட்டில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள்.
இலக்கிய பின்புலம்
அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில். அ.கோ.படைவீடு, போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில். அ.கோ.படைவீடு, போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,