Arulmigu Nerthirotharakeswarar Temple, Panayapuram - 605601, Viluppuram District [TM020434]
×
Temple History
தல வரலாறு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.தேவாரப் பாடல்பெற்ற நடுநாட்டுத் தலம் தக்கன் பேறு பெற்ற ஆலயம் சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்ற தலம் இறைவனையும் இறைவியையும் சூரியன் ஏழுநாட்கள் ஒருசேர வழிபடும் சிறப்பு தலம் கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்பு கொண்டதாக திகழ்கிறது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.சிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்தான் தக்கன். அந்த யாகம் தோல்வியில் முடிந்தது. இந்த பழி பாவம் நீங்குவதற்காக பல சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டான் தக்கன். அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில். இதற்குச் சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை புடைப்புச் சிற்பமாக...விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.தேவாரப் பாடல்பெற்ற நடுநாட்டுத் தலம் தக்கன் பேறு பெற்ற ஆலயம் சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்ற தலம் இறைவனையும் இறைவியையும் சூரியன் ஏழுநாட்கள் ஒருசேர வழிபடும் சிறப்பு தலம் கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்பு கொண்டதாக திகழ்கிறது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம்.சிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்தான் தக்கன். அந்த யாகம் தோல்வியில் முடிந்தது. இந்த பழி பாவம் நீங்குவதற்காக பல சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டான் தக்கன். அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில். இதற்குச் சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன் வீரபத்திரரால் தாக்கப்பட்டு பற்களையும் தன் பலத்தையும் இழந்தான். அந்த சாபம் நீங்கி பழைய நிலையை அடைய இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான் என்கிறது தலபுராணம். இதனை உறுதிப் படுத்தும் வகையில் இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில் ஏழு நாட்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது. இந்த நாட்களில் இறைவனின் மீது சூரியன் ஒளி விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.இத்தல இறைவனுக்கு நேத்ரோதார சுவாமி என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.