இலக்கிய பின்புலம்
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகரில் திரு.வி.க.வீதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் உள்ள அய்யனார் மூலவரை குலதெய்வாமாக பலர் வழிபடுகின்றனர் இங்கு வந்து பொங்கல் வைத்து படைத்ழது தங்களுடைய பிராத்தனைகளை நிறைவேற்றி செல்கின்றனர். ஆற்காடு நவாப்பின் படைகள் பாண்டிச்சேரிக்கு செல்லும்போது இப்பகுதியில் உள்ள நவாப் தோப்பு பகுதியில் முகாம் அமைத்து தங்குவது வழக்கம் என்றும் அப்போது படைவீரர்கள் இத்திருக்கோயிலில் உள்ள அய்யனாரை வழிபட்டு செல்வார்கள் என்றும் இதனல் இந்த அய்யனார் பாண்டி அழகர் அய்யனார் என்று அழைக்கப்படுவதாகவும் செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.