அருள்மிகு திருக்குமாரசுவாமி திருக்கோயில், இராஜேந்திரப்பட்டினம் - 608703, கடலூர் .
Arulmigu Thirukumarasamy Temple, Rajendirapattinam - 608703, Cuddalore District [TM020685]
×
Temple History
தல வரலாறு
இறைவர் திருப்பெயர் நீலகண்டேஸ்வரர் சுவேதார்க்கவனேஸ்வரர். இறைவியார் திருப்பெயர் அபீதகுஜநாயகி நீலமலர்கண்ணி நீலோற்பலாம்பாள்.தல மரம்வெள்ளெருக்கு.தீர்த்தம் நீலோற்பலதீர்த்தம். கந்த தீர்த்தம் செங்கழுநீர் தீர்த்தம் நீல தீர்த்தம்.வழிபட்டோர்வியாக்ரபாதர் உருத்திரசன்மர் சம்பந்தர் ஆகியோர்.வெள்ளெருக்கைத் தலமரமாகக் கொண்டுள்ள தலமாதலின் எருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது. வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர் பூசித்த தலங்கள் புலியூர் என்ற பெயருடன் விளங்குகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. ஏனையவை பெரும்பற்றப்புலியூர் சிதம்பரம் தென்புலியூர் திருப்பாதிரிப்புலியூர் வடபுலியூர் ஓமாம்புலியூர் பெரும்புலியூர். உருத்திரசன்மர் சிவனை வழிபட்டு ஊமை நீங்கப்பெற்ற பெருமையுடைய தலம். தேவாரப் பாடல்கள் சம்பந்தர் படையார் தருபூதப்.திருஞானசம்பந்தர் பாடல் பெற்றத் திருத்தலம். இவ்வூருக்குக் கிழக்கே ஒரு சிவன் கோவில் தனியாக உள்ளது. இஃது கீழ்க்கோட்டூர் மணியம்பலமாகும் இது...இறைவர் திருப்பெயர் நீலகண்டேஸ்வரர் சுவேதார்க்கவனேஸ்வரர். இறைவியார் திருப்பெயர் அபீதகுஜநாயகி நீலமலர்கண்ணி நீலோற்பலாம்பாள்.தல மரம்வெள்ளெருக்கு.தீர்த்தம் நீலோற்பலதீர்த்தம். கந்த தீர்த்தம் செங்கழுநீர் தீர்த்தம் நீல தீர்த்தம்.வழிபட்டோர்வியாக்ரபாதர் உருத்திரசன்மர் சம்பந்தர் ஆகியோர்.வெள்ளெருக்கைத் தலமரமாகக் கொண்டுள்ள தலமாதலின் எருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது. வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர் பூசித்த தலங்கள் புலியூர் என்ற பெயருடன் விளங்குகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. ஏனையவை பெரும்பற்றப்புலியூர் சிதம்பரம் தென்புலியூர் திருப்பாதிரிப்புலியூர் வடபுலியூர் ஓமாம்புலியூர் பெரும்புலியூர். உருத்திரசன்மர் சிவனை வழிபட்டு ஊமை நீங்கப்பெற்ற பெருமையுடைய தலம். தேவாரப் பாடல்கள் சம்பந்தர் படையார் தருபூதப்.திருஞானசம்பந்தர் பாடல் பெற்றத் திருத்தலம். இவ்வூருக்குக் கிழக்கே ஒரு சிவன் கோவில் தனியாக உள்ளது. இஃது கீழ்க்கோட்டூர் மணியம்பலமாகும் இது கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்றது. உருத்திரசன்மர் உருவம் கோயிலில் உள்ளது. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரப்பதி.அவதாரத் தலம் திருஎருக்கத்தம்புலியூர் இராசேந்திரப்பட்டினம்வழிபாடு குரு வழிபாடு.முத்தித் தலம் திருநல்லூர்ப்பெருமணம் குருபூசை நாள் வைகாசி மூலம். திருநீலகண்டயாழ்ப்பாணருடைய திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் கூடியுள்ளது. திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு தனிச் சந்நிதி திருக்கோயிலின் எதிர்புறம் குளக்கரையில் உள்ளது. வெளிச்சுற்றில் இடப்புறமாக நால்வரும் எழுந்தருளியுள்ளனர். தட்சிணாமூர்த்திக்கு மேலே சிறிய கோயில் அமைப்பில் சட்டைநாதர் தரிசனம் தருகிறார்.அமைவிடம் அமி. நீலகண்டேசுவரர் திருக்கோயில் இராஜேந்திரப்பட்டினம் . கருவேப்பிலக்குறிச்சி வழி விருத்தாச்சலம் வட்டம் கடலூர் மாவட்டம். மாநிலம் தமிழ் நாடு இஃது விருத்தாசலம் ஜயங்கொண்டம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். சென்னை தஞ்சை நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பை அடுத்து ஸ்ரீமுஷ்ணம் விருத்தாசலம் பாதையில் சென்று ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம்.