Arulmigu Agastheswarar Temple, Vettavalam - 606754, Tiruvannamalai District [TM020921]
×
Temple History
தல வரலாறு
பண்டைக்காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட வேட்டவலம் பகுதியை வீரபாண்டிய சோழன் எனும் மன்னன் அரசு செய்து வந்தான். அவனது காலத்தில் விவசாயி ஒருவன் தனது நிலத்தில் ஏர் கலப்பை கொண்டு உழும்போது, ஓரிடத்தில் ஏர் கலப்பை நின்று கணீர் என்று சப்தம் கேட்டது. அதனைக் கவனத்தில் கொள்ளாது தொடர்ந்து அவன் நிலத்தினை உழுது சென்றான். அவ்வமயம் ஏர் கலப்பை நின்று சப்தம் கேட்ட இடத்தில் இரத்தம் பீறிட்டுச் செல்வதைக் கண்டு பயந்தோடி ஊர் மக்களிடம் விவரம் கூறினான். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசனை நாடி விவரத்தைக் கூறினர். அரசன் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து குலகுருவை நாடினான். அவர் ஞானதிருட்டி மூலம் விவரம் அறிந்து இரத்தம் பெருகியோடிய விவசாயியின் நிலத்தில் அபிசேக ஆராதனைகள்...பண்டைக்காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட வேட்டவலம் பகுதியை வீரபாண்டிய சோழன் எனும் மன்னன் அரசு செய்து வந்தான். அவனது காலத்தில் விவசாயி ஒருவன் தனது நிலத்தில் ஏர் கலப்பை கொண்டு உழும்போது, ஓரிடத்தில் ஏர் கலப்பை நின்று கணீர் என்று சப்தம் கேட்டது. அதனைக் கவனத்தில் கொள்ளாது தொடர்ந்து அவன் நிலத்தினை உழுது சென்றான். அவ்வமயம் ஏர் கலப்பை நின்று சப்தம் கேட்ட இடத்தில் இரத்தம் பீறிட்டுச் செல்வதைக் கண்டு பயந்தோடி ஊர் மக்களிடம் விவரம் கூறினான். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசனை நாடி விவரத்தைக் கூறினர். அரசன் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து குலகுருவை நாடினான். அவர் ஞானதிருட்டி மூலம் விவரம் அறிந்து இரத்தம் பெருகியோடிய விவசாயியின் நிலத்தில் அபிசேக ஆராதனைகள் செய்யுமாறும் அங்கு பெருமான் சுயம்பு ரூபமாய் உரைவதாகவும் அவ்விடத்து திருக்கோவில் ஒன்றை எழுப்புமாறும் கூறியருளினார்.
அரசன் நான்மறை வேதியர்களுடன் விவசாயியின் நிலத்தை அடைந்தான். அங்கு ஏர் கலப்பை நின்ற இடத்தில் பலவகைப் பொருட்களை கொண்டு அபிசேகித்து அவ்விடத்தைத் தோண்டுகையில் அங்கு பெருமான் சுயம்புலிங்க ரூபமாய் திருக்காட்சியருளினார். அனைவரும் மகிழ்ந்து பஞ்சாட்சர மந்திரஞ் சொல்லி தங்களது கரமலரை சிரமலர் மேல் குவித்து வணங்கினர்.
பின்னர் அரசன் ஒரு ஒப்பிலா கருங்கற் கோயிலை அங்கு எழுப்பினான் என்பது வரலாறு. இங்கு இலிங்கத்திருமேனி மீது ஏர் கலப்பை பட்ட வடு உள்ளதைப் பக்தர்கள் இன்றும் கண்டு வணங்கலாம்.
அகத்தியர் கயிலையிலிருந்து தென்திசை செல்லும் சமயம் பல தளங்களில் தங்கிச் சிவபூஜை செய்தார். அவர் வழிபட்ட தளங்களெல்லாம் அவரது திருப்பெயரால் அகத்தீசுவரம் என்று அழைக்கப்படுகின்றன. அவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானையும் வழிபட்டுச் சென்றதால் இப்பெருமான் அகத்தீசுவரர் என வழங்கப்படுகின்றார்.
இவ்வூரில் வாழ்ந்து வந்த ஜமீன்தார் ஒருவரின் இரண்டு மனைவியருள் ஒருவருக்கு தீய பேய் ஒன்று பிடித்திருந்தது. மற்றொரு மனைவி மகோதரம் எனும் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு வருந்தினால். இதனை நீக்குவதற்கு மந்திரவாதிகள் பல உயிர்களை பலிகொடுத்து பூசைகள் செய்தும் பேயும் நோயும் விலகவில்லை.
ஒரு சமயம் வடலூர் இராமலிங்க சுவாமிகள் அவ்வழியே சென்றார். ஜமீன்தார் வீட்டை கடக்கும் சமயம் அங்கு பல உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது அறிந்து மனம் துடித்து, கிராமத்தினரை சந்தித்து விவரம் கேட்டறிந்தார். வள்ளலாரின் வருகையை அறிந்த ஜமீன்தார் அவரைப் பயபக்தியுடன் வரவேற்று, தனது மனைவிமார்களின் குறைகளைத் தெரிவித்தார். வள்ளலாரின் அருட்பார்வை ஜமீன்தாரின் மனைவிமார்களின் மீது பட்டவுடன் அவர்களைப் பிடித்திருந்த பேயும், நோயும் விலகி, பொலிவான உடலைப் பெற்றுத் திகழ்ந்தனர். இந்த அற்புதத்தைக் கண்ட அனைவரும் வள்ளலாரின் அடிபணிந்து வணங்கினர். இவ்வாறு அகத்தீசரின் புண்ணியப் பதியில் அருட்பிரகாச வள்ளலாரின் அற்புதமும் நிகழ்ந்தது.