தல வரலாறு
இத்திருக்கோயிலில் அவரையானந்த சாமி என்பவர் இத்திருத்தலத்தில் உள்ள புற்றை வழிபாட்டு வந்தார். இவர் வடலூர் இராமலிங்க அடிகளாரின் சீடராவர். அவரையானந்த சாமி சோமவார தினத்தில் மோட்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே திங்கள்கிழமைதோறும் பக்தர்கள் திரளாக வந்து பிரம்மமாக உள்ள அருள்மிகு பிரம்மராய சுவாமி அர்ச்சனை, அபிஷேகம், மலர்மாலை, காப்பிடல் போன்றவை செய்து வழிபடுகின்றனர். இத்திருத்தலத்தில் சீட்டு கட்டுதல் சிறப்புடையதாகும். இத்திருத்தலத்தில் உள்ள குருந்தை மரத்தடியில் உள்ள நாவலிங்கத்தை மாணிக்கவாசகர் சுவாமிகள் வழிபட்டுள்ளனர் என்பது சிறப்புடையது.