தல வரலாறு
பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் தில்லையில் அருள்மிகு நடராஜர் உமையவள் சிவகாமசுந்தரி மற்றும் தில்லை காளி எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசத்திற்கு தென்கிழக்கே அமைந்துள்ள புண்ணிய தலமாம் கவரப்பட்டு என்னும் கிராமத்தில் கிழக்கு முகமாக விளங்கி உலகம் உய்ய அருள்பளித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சந்திரசேகரசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்று அறிய இயலவில்லை இத்திருத்தலத்தில் மூலவர் சந்திரசேகரஸ்வாமி லிங்க வடிவில் அருள்புரிகிறார்