இலக்கிய பின்புலம்

ராணுவ குடியிருப்பு பகுதி ஆர்டிலரி எனப்படும். பிரிட்டிஷ் ராணுவம் இங்கே இருந்தாக தெரியவருகிறது எனவே இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட திருக்கோயில் ஆர்டிலரி தர்மராஜா திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. திருக்கோவில் திரவுபதி அம்மனுக்காக எடுக்கப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சன்னதியின் இடது புறம் கிருஷ்ணனுக்கு என தனி சன்னதி உள்ளது. இதன் எதிரில் ஆஞ்சநேயர் சன்னதியும் சன்னதி வலது புறத்தில் விநாயகர் சன்னதியும் உள்ளன. மூன்று நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது அதன் சிறப்பம்சமாகும்.