இலக்கிய பின்புலம்
இந்த திருக்கோயில் திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு குமரன் அல்லது அருள்மிகு சுப்ரமணியசுவாமி என்று அழைக்கப்படுகிறார். திருவண்ணாமலை நகரின் ஆண்டின் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான திருவூடல் திருவிழா அன்று இறுதியில் அருள்மிகு உண்ணாமுலையம்மன் இத்திருக்கோவிலுக்கு வந்து தங்கியிருப்பார் மறுநாள் காலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் இத்திருக்கோயிலுக்கு வந்து அருள்மிகு உண்ணாமுலையம்மனை சமாதானம் செய்து கிரிவலம் செல்வது சிறப்பான ஒரு விஷேஷம் ஆகும்