அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆலந்தூர், சென்னை - 600016, சென்னை .
Arulmigu Siva Subra Mania Swamy Temple, Alandur, Chennai - 600016, Chennai District [TM000243]
×
Temple History
தல வரலாறு
பண்டைய காலத்தில் அகத்திய மாமுனிவர் இத்தலத்தில் புனித தவம் இயற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் எழில் வேல் அரசானான எம்தந்தை முருகன் சிறுவனாக தோன்றி அவருக்கு அறிவுரை வழங்கினார். அவற்றை அகத்தியர் பச்சிளம் பாலகன் ஒருவன் என நினைத்து அலட்சியப் படுத்தி அதனை ஏற்க மறுத்த போது அன்னை பராசக்தி அகத்தியர் முன் தோன்றி அகத்தியரே அந்தப் பாலகன் வேறு யாருமல்ல என் அருட்செல்வன் முருகனே தான் என்றுரைக்க சிவபெருமானும் தோன்றி காட்சி அளித்தார். விநாயகப் பெருமானும் ஆனந்தக் கூத்தாடினார். இதனால் முருகனுக்கு சிவசுப்பிரமணியர் என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் சிவசுப்பிரமணியர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு ஆறு முகங்கள் பன்னிரண்டு கைகள் உள்ளன. மயில்...பண்டைய காலத்தில் அகத்திய மாமுனிவர் இத்தலத்தில் புனித தவம் இயற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் எழில் வேல் அரசானான எம்தந்தை முருகன் சிறுவனாக தோன்றி அவருக்கு அறிவுரை வழங்கினார். அவற்றை அகத்தியர் பச்சிளம் பாலகன் ஒருவன் என நினைத்து அலட்சியப் படுத்தி அதனை ஏற்க மறுத்த போது அன்னை பராசக்தி அகத்தியர் முன் தோன்றி அகத்தியரே அந்தப் பாலகன் வேறு யாருமல்ல என் அருட்செல்வன் முருகனே தான் என்றுரைக்க சிவபெருமானும் தோன்றி காட்சி அளித்தார். விநாயகப் பெருமானும் ஆனந்தக் கூத்தாடினார். இதனால் முருகனுக்கு சிவசுப்பிரமணியர் என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் சிவசுப்பிரமணியர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு ஆறு முகங்கள் பன்னிரண்டு கைகள் உள்ளன. மயில் மீது அமர்ந்து உள்ளார் இவருக்கு வயலூர் முருகன் போல் தோற்றம் காணப்படுகிறது. இவருக்கு வலது புறம் வள்ளியும் இடது புறம் தெய்வானையும் உள்ளனர். மேலும் சுவாமியின் அருகில் இடும்பன் உள்ளார். மூலவர் சன்னதியின் வலதுபுறம் விநாயகர் சன்னதியும் இடதுபுறம் காசி விசுவநாதர் மற்றும் காசி விசாலாட்சி சன்னதியும் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலில் நுழையும்போது துவஜஸ்தம்பம் பலிபீடம் மயில் ஆகியவைகள் அமைந்துள்ளன. திருக்கோயிலை சுற்றி வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். சன்னதியின் பின்புறம் நாகர் சன்னதிகள் ராகு கேது தனி சன்னதிகளும் உள்ளன. நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி அமைந்துள்ளன.இந்த நவ கிரகத்தில் சூரியன் தன் இரு மனைவிகளுடன் இருப்பதே இந்த தலத்தின் சிறப்பம்சமாகும். இத்திருக்கோயிலின் எதிரில் அழகிய குளம் ஒன்று அமைந்துள்ளது.