Arulmigu Kaliyugavaradharajaperumal Temple, Kallankurichi - 621705, Ariyalur District [TM025260]
×
Temple History
தல வரலாறு
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கடுகூரில் வாழ்ந்து கொண்டிருந்த கோபாலன் படையாட்சி, கடுகூரிலிருந்து வந்து மேற்படி ஊருக்கு தெற்கிலிருந்த காடுகளை வெட்டி மேடுபள்ளம் திருத்தி, உழுது பயிரிடவும் வீடுகள் கட்டவும், நிலத்தை சீர்படுத்தினார். கோபாலன் படையாட்சி தாம் சீர்படுத்திய நிலத்தில் வீடு கட்டிக் குடியேறினார். மற்றும் பலரை குடியமர்த்தினார். இதனால் இவரால் உண்டாக்கிய இந்த ஊருக்கு கோபாலன்குடிக்காடு எனும் பெயரிட்டனர்.
(தற்பொழுது கோப்பிலியன்குடிக்காடு என்று அழைக்கப்படுகிறது)
கோபாலன் படையாட்சிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த்து. அந்த குழந்தைக்கு மங்கான் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர்.
மங்கான் படையாட்சிக்கு தக்க வயதடைந்ததும் அவருக்கு தந்தை கோபாலன் படையாட்சி திருமணம்...அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கடுகூரில் வாழ்ந்து கொண்டிருந்த கோபாலன் படையாட்சி, கடுகூரிலிருந்து வந்து மேற்படி ஊருக்கு தெற்கிலிருந்த காடுகளை வெட்டி மேடுபள்ளம் திருத்தி, உழுது பயிரிடவும் வீடுகள் கட்டவும், நிலத்தை சீர்படுத்தினார். கோபாலன் படையாட்சி தாம் சீர்படுத்திய நிலத்தில் வீடு கட்டிக் குடியேறினார். மற்றும் பலரை குடியமர்த்தினார். இதனால் இவரால் உண்டாக்கிய இந்த ஊருக்கு கோபாலன்குடிக்காடு எனும் பெயரிட்டனர்.
(தற்பொழுது கோப்பிலியன்குடிக்காடு என்று அழைக்கப்படுகிறது)
கோபாலன் படையாட்சிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த்து. அந்த குழந்தைக்கு மங்கான் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர்.
மங்கான் படையாட்சிக்கு தக்க வயதடைந்ததும் அவருக்கு தந்தை கோபாலன் படையாட்சி திருமணம் செய்து வைத்தார். மங்கான் படையாட்சிக்கு ஒருமாட்டு சந்தை இருந்தது. ஒருநாள் அந்த மாட்டு சந்தையில் நிறைவுற்ற கருவுடனிருந்த
ஒரு பசுமாடு மட்டும் காணாமல் போய்விட்டதை தேடி அலைந்தார். பல இடங்களில் அந்த பசுமாட்டைத் தேடியும் காணாமல் அலைந்து வந்து அயர்ந்து
அன்றிரவு வீட்டில் தூங்கும்போது, கனவில் ஒரு பெரியவர் தோன்றி காணாமல் போன பசு இருக்குமிடத்தை சொன்னார். தன் கனவில் பெரியவர் சொன்ன இடத்தை நாடி மங்கான் படையாட்சி தனது பண்ணையாட்களுடன் சென்று பார்த்தபோது காட்டில் அந்த பசு மாவிலிங்க மரத்திற்கும் ஆலமரத்திற்கும் இடையில் சாய்ந்திருந்த ஒருநீண்ட கம்பத்திலிருக்கும் சுவாமிக்கு தன் மடியிலிருந்து பால் சொரிவதை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
பால்சொரிந்து கொண்டிருந்த பசு தன்எசமானர் தன்னைத்தேடி வந்திருப்பதைக் கண்டதும் ஓடிவந்து மங்கான் படையாட்சியின் கரங்களை அன்புடன் மோந்து நாவினால் துழாவி நன்றியை தெரிவித்தது. மங்கான் படையாட்சி தனது பண்ணையாட்களுடன் கம்பத்திக் அருகில் சென்று அக்கம்ப்பபெருமானை தொட்டு கும்பிட்டு வணங்கினார். மங்கான் படையாட்சி
கம்பபெருமானை தொட்டு கும்பிட்டு தனக்குச் சொந்தமான பசுவையும், கன்றையும் உடனைழத்துக்கொண்டு தன் இல்லம் நாடி புறப்பட்டார்.
மங்கான் படையாட்சி பசுமாட்டையும் கன்றையும் மாட்டுமந்தையில் சேர்த்துவிட்டு மனநிம்மதியுடன் தன் இல்லத்தில் படுத்து உறங்கும் போது மீண்டும்
கனவில் முன்தோன்றிய பெரியவர் காட்சி தந்து, உனக்கு சொந்தமான பசுவையும்,
கன்றையும் மட்டும் கொண்டு வந்தாய், மகாசக்தி வாய்ந்த கம்பத்தை விட்டுவிட்டு
வந்து விட்டாய், இந்த கம்பம் உன் முன்னோர்கள் வண்டியில் ஏற்றி வரும்போது
வண்டியின் அச்சு ஒடிந்து கம்பம் கீழே விழுந்து கம்பத்தின் உச்சி முனை உடைந்து விட்டது. கம்பம் பங்கப்பட்டு விட்டதாக எண்ணி அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டனர், அவர்கள் விட்டு வந்த கம்பத்தை நீ நிலைநிறுத்தி
ஆலயங்கட்டி வழிபடுக, நான் உன்னையும் உனது வழித்தோன்றல்களையும், காக்கும் கருணை கொண்டுள்ளேன். அக்கம்பத்திலிருக்கும் என்பெயர் கலியுக பெருமாள் என்பதாகும் என்று கூறி மறைந்தார்.
தனது கனவில் பெரியவராக வந்தது கலியுக பெருமாள்தான் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்த மங்கான் படையாட்சி, பொழுது புலர்ந்தவுடன்
பண்ணையாட்களுடனும் தக்க கருவிகளுடனும் காட்டில் கம்ப ப் பெருமாள்
இருக்குமிடம் நாடிச் சென்றார்.
மங்கான் படையாட்சி கம்பபெருமாள் இருக்குமிடத்தில் தனது பண்ணையாட்களுடன் வந்து, கம்பத்தை நிலைநிறுத்தி தனது பசுவின் பாலைக்கறந்து பால் அபிசேகம் செய்து, பூமாலைகள் சார்த்தி தினைப்பொங்கல் பொங்கி தானே படைத்து, தான் பிறந்ததின் பயனை அடைந்த்தாக எண்ணி கலியுக பெருமானை வணங்கி வழிபட்டார்.
மங்கான் படையாட்சி ஊர்மக்களைக்கூட்டி எல்லோரிடமும் கலியுக பெருமானின் மாண்பினையும் அருளாற்றலையும் கூறினார். மங்கான் படையாட்சி நிலைநிறுத்திய கம்ப பெருமாள் இருக்குமிடத்தில் தனது பொருளைக்கொண்டு
மூலமண்டபம் கட்டினார். மங்கான் படையாட்சி காலத்தில் தான் இவ்வாலயம்
உண்டாக்கப்பட்டது. மேற்படி மங்கான் படையாட்சியாரின் வழித்தோன்றல்களே
இத்திருக்கோயிலின் ஆதீன பரம்பரை தருமகர்த்தாக்களாக இருந்து இத்திருக்கோயிலின் நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.