தல பெருமை
ஏறத்தாழ 300ஆண்டுகளுக்கு முன்பாக குரு ஸ்ரீ பஞ்சாட்சர சித்தர் மீன்சுருட்டி கிராமத்தில் எழுந்து அருளி மேற்படி சுற்று புற கிராம பொது மக்கள் நன்மைக்காக அருள் மிகு மீனாக்ஷி அம்பிகை சமேத ஸ்ரீ சொக்கலிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தை நிர்மாணித்துக் பொதுக்மக்கள் வழிப்பாடு தளமாக ஆக்கினார்கள்.ஸ்ரீ குரு மகா சித்தர் சுவாமிகள் ஆடி மாதம் புராட்டத்தி நட்சத்திர புண்ணிய காலத்தில் மீன்சுருட்டி கிராமத்தில் ஜீவா சமாதி அடைந்தார்கள்.அந்த நாள் தொட்டு இந்த பகுதி மக்களின் நலனுக்காக குரு ஸ்ரீ பஞ்சாட்சர சித்தர் அருள் பாலித்து வருகிறார்கள்.ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் புராட்டத்தி நட்சத்திர காலத்தில் குரு மகா பூஜை நம் முன்னோர்களால் சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது.