கவுதம முனிவரின் மனைவி அகலிகை. அவளது அழகில் மயங்கி பித்தன் ஆனான் இந்திரன். அவளை எப்படியாவ அடைந்து விடத் துடித்தான். ஒரு நாள் இந்திரனின் மாயச் செய்கையால் கவும முனிவர் வழக்கப்படியான பொழுதுக்கு முன்னரே தவறாக ஆற்றுக்குக் கிளம்பி ஜபம் தவம் வேள்ளி முடிக்கச் சென்றார். இந்திரனோ கவுதரின் பர்ண சாலைக்குள் அவருருவில் நுழைந்து அகலிகையை பெண்டாளப் போனான்.
ஆற்றுக்குச் சென்ற கவுதமர் அனைத்தையும் மனக்கண்ணால் கண்டு உணர்ந்து வெறும் காமவயத்தால் தவறு செய்த இந்திரன் உடல் முழுவதும் குறிக்கண் பெறவும், கூடலில் அமர்ந்து அருள் செய்யும் இறைவனை குறிப்பிட்டக் கால அளவுக்குப் பிறகு துதித்து சாபவிமோசனம் பெறவும் தன்னிலை மறந்து இருந்த தவறுக்காக அகலிகை கல்லாகக் கடவாள் எனவும்...கவுதம முனிவரின் மனைவி அகலிகை. அவளது அழகில் மயங்கி பித்தன் ஆனான் இந்திரன். அவளை எப்படியாவ அடைந்து விடத் துடித்தான். ஒரு நாள் இந்திரனின் மாயச் செய்கையால் கவும முனிவர் வழக்கப்படியான பொழுதுக்கு முன்னரே தவறாக ஆற்றுக்குக் கிளம்பி ஜபம் தவம் வேள்ளி முடிக்கச் சென்றார். இந்திரனோ கவுதரின் பர்ண சாலைக்குள் அவருருவில் நுழைந்து அகலிகையை பெண்டாளப் போனான்.
ஆற்றுக்குச் சென்ற கவுதமர் அனைத்தையும் மனக்கண்ணால் கண்டு உணர்ந்து வெறும் காமவயத்தால் தவறு செய்த இந்திரன் உடல் முழுவதும் குறிக்கண் பெறவும், கூடலில் அமர்ந்து அருள் செய்யும் இறைவனை குறிப்பிட்டக் கால அளவுக்குப் பிறகு துதித்து சாபவிமோசனம் பெறவும் தன்னிலை மறந்து இருந்த தவறுக்காக அகலிகை கல்லாகக் கடவாள் எனவும் ராமன் பாதத்துளி பட்டு விமோசனம் பெறுவாள் எனவும் தண்டனையும் விமோசனமும் இருவருக்கும் அருளினார்.
அதன்படி இந்திரன் குறிக்கண்களோடு நெடு நாள் அலைந்து திரிந்து பலர் கூடு அவைகளுக்குச் செல்லாமல், வெட்கி, தலைகுனிந்து, மறைந்து காட்டிலும் மலைகளிலும் அலைந்து, இறுதியாக அருகிலுள்ள மலையில் இருந்து வரும் குடகனாறும் அமராவதியும் கூடும் துறையில் சுயம்புவாய் தானாய் உருவாகி அருள் வழங்கிக் கொண்டு இருக்கும் நீரில் பூத்த நெருப்பான சிவனைக் கண்டு வணங்கி தன் சாபம் தீர்ந்தான் என்பது இத்தலத்தின் வரலாறு ஆகும்.