தல வரலாறு
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர், அருள்மிகு செல்லாண்டியம்மன் காக்கும் தெய்வமாக பெருமை கொண்டது. இதனை பிடாரியம்மன் என்றும் அழைப்பர். இத்திருக்கோவிலின் கருவறை சப்தமாதர்கள் என்று அழைக்கப்படும் பிராம்ஹி,மஹேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, மஹேந்திரி, சாமுண்டி என்ற தெய்வ உருவங்கள் வடக்கு பார்த்து அமைந்த நிலையிலும், பிடாரி என்றழைக்கப்படும் ஊர் காவல் தெய்வம் வல பக்கத்திலும் கிழக்கு பார்த்து வீற்றிருக்கின்றனர். இத்திருக்கோயிலின் வடப்புறத்தில் ஆரா அமுதீஸ்வரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. எனவே இத்திருக்கோயிலும் அக்காலத்திலே உருவானதாகத்தான் கருதப்படுகிறது.