தல வரலாறு
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இரண்யமங்களம், அருள்மிகு மாரியம்மன் பிடாரியம்மன் திருக்கோயிலானது சிறப்புமிக்க திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது சுற்றியிருக்கும் மக்களால் மிகவும் போற்றதற்குரிய கோயிலாகும். இத்திருக்கோயில் அம்மனை ஸ்ரீஜாட்சர மத்திரமான காயத்ரீ மந்திரத்தை தினமும் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு மனத்திலும், அறிவிலும், உடலிலும், தெளிவும், ஆரோக்கியமும், அபரிமிதமாக பெருகும். இவளை அனுதினமும் வணங்கி பூஜிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கொழிக்கும். இத்திருக்கோயிலை தரிசித்து வழிபட்டு வலம் வருபவர்கள் இறைவன் அருளுடன் மன அமைதியும் பெறுவர் என்பதை இன்றும் அனுபவ பூர்வமாகக் காணலாம்.