தல வரலாறு
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் வட்டம் மகமாயிபுரம் கிராமத்தில் ஒருவர் நிலத்தை ஏர் கொண்டு உழும் பொழுது கலப்பையின் நுனியில் தட்டுப்பட்டு உழவரால் கண்டெடுக்கப்பட்டு பிரதிஸ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். தற்போது வழிபட்டு வரும் அம்மன் தன்னை கண்டெடுத்த ஏர் உழவு செய்த உழவரையும் அவ்வூர் பொதுமக்களையும் மிக மகிழ்ச்சியோடு வாழ செய்வதாக அவ்வூர் பொதுமக்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.