Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், Perambur - 622203, புதுக்கோட்டை .
Arulmigu Veeramakaliamman Temple, Perambur - 622203, Pudukkottai District [TM025429]
×
Temple History

தல வரலாறு

பல வருடங்களுக்கு முன் செம்முனி என்ற மனித இரத்தம் குடிக்கும் கொடுமையான காளி தெய்வம் வசித்து வந்தது. அது பெரம்பூர் வோளளர் தெருவில் உள்ள குழந்தைகளை வீட்டுக்கு ஒருவர் வீதம் வருடத்திற்கு ஒரு குழந்தையைக் காவு வாங்கிக் கொண்டு இருந்தது. அதனால் மக்கள் மிகவும் கவலையுடன் இருந்தனர். ஒரு பிள்ளையைப் பெற்றத் தாய் ஒருத்தி கணவனை இழந்து, தன் குழந்தையை நம்பி வாழ்ந்து வந்தாள். செம்முனிக்கு அந்த வருடம் அக்குழந்தையைப் பலிகொடுக்கும் முறை வந்தது. அந்தத் தாய் தன் ஒரு குழந்தையைக் காப்பாற்ற வழி தெரியாமல் மனம் நொந்து பெரம்பூரில் உள்ள வாட்டாருடைய ஐயனார், வளர்த்தாரப்பன் கோயிலுக்கு வந்து...

தல பெருமை

பல வருடங்களுக்கு முன்பு செம்முனி என்ற மனித ரத்தம் குடிக்கும் கொடுமையான தெய்வம் வசித்து வந்தது.அது கொடுமையான காவு வாங்கும் கூடியதாக இருந்தது அப்போது ஓர் குழந்தையை காவு வாங்கும் நோக்கோடு இருந்தது.அந்த குழந்தையின் தாய் வீரமமுனியிடம் குறையை சொல்லி அழுதாள் வீரமுனை தெய்வம் உடனே செம்முனியை பூமிக்குள் அழுத்திவிட்டதுபிறகு அந்த ஊர் மக்கள் வீரமமுனியை தங்கள் ஊரிலையே இருக்க வேண்டும்மக்கள் கேட்டு கொண்டதுபடி வீரமாமுனிவர் தன் தங்கையையும் அழைத்து வந்து செம்முனி அழிந்த இடத்தில் நிறுத்திஅருள் தந்து வருகிறது.