அருள்மிகு முனீஷ்வரர் திருக்கோயில், Pudukkottai, Pudukkottai - 622001, புதுக்கோட்டை .
Arulmigu Munishwarar Temple, Pudukkottai - 622001, Pudukkottai District [TM025446]
×
Temple History
தல வரலாறு
பொற்பனைக்கோட்டை என்பது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊரின் பெயர், இங்குள்ள பனைமரத்தில் தங்க பனம்பழம் காய்த்ததாகக் கூறப்படுவதால் வந்தது என்று கருதப்படுகிறது. தொண்டைமான்கள் புதுக்கோட்டை நகரத்தை அமைத்தபோது, பொற்பனைக்கோட்டை போன்ற பகுதிகள் படைகள் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பெயர்க்காரணம்: பனைமரம் தங்க பனம்பழத்தைக் காய்த்ததால் இப்பகுதிக்கு பொற்பனைக்கோட்டை என்ற பெயர் வந்ததாக ஒரு கருத்து உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம்: தொண்டைமான் பரம்பரையினர் புதுக்கோட்டையை நிறுவியபோது, படைகள் தங்கும் முகாமாக பொற்பனைக்கோட்டை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இக்கோட்டையைச் சுற்றி இடிந்த நிலையில் மதில்சுவர் செங்கற்கள் குவிந்து காணப்படுகின்றன. கோட்டையைச் சுற்றி நான்கு நுழைவாயில்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது. கோட்டையினுள்ளே அகழி இருந்ததற்கான அடையாளங்களும் ஒரு குளமும்...பொற்பனைக்கோட்டை என்பது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊரின் பெயர், இங்குள்ள பனைமரத்தில் தங்க பனம்பழம் காய்த்ததாகக் கூறப்படுவதால் வந்தது என்று கருதப்படுகிறது. தொண்டைமான்கள் புதுக்கோட்டை நகரத்தை அமைத்தபோது, பொற்பனைக்கோட்டை போன்ற பகுதிகள் படைகள் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பெயர்க்காரணம்: பனைமரம் தங்க பனம்பழத்தைக் காய்த்ததால் இப்பகுதிக்கு பொற்பனைக்கோட்டை என்ற பெயர் வந்ததாக ஒரு கருத்து உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம்: தொண்டைமான் பரம்பரையினர் புதுக்கோட்டையை நிறுவியபோது, படைகள் தங்கும் முகாமாக பொற்பனைக்கோட்டை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இக்கோட்டையைச் சுற்றி இடிந்த நிலையில் மதில்சுவர் செங்கற்கள் குவிந்து காணப்படுகின்றன. கோட்டையைச் சுற்றி நான்கு நுழைவாயில்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது. கோட்டையினுள்ளே அகழி இருந்ததற்கான அடையாளங்களும் ஒரு குளமும் காணப்படுகிறது. கோட்டையானது மையத்தில் வட்ட வடிவில் இருந்ததற்கான சுவடுகளும் காணப்படுகின்றன. இதை அரண்மனைத்திட்டு என்ற பெயரில் உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். கோட்டையின் வட்ட வடிவ அமைப்பு செயற்கை கோள் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இக்கோட்டையில் சுரங்கம் ஒன்று இருப்பதாகவும், அது இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருவரங்குளம் வரை செல்வதாகவும் உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையிலுள்ள குளக்கரையில் பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நடுகல் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையில் வைத்துப்பாதுகாக்கப்பட்டுள்ளது. இக்கல் முக்கோண வடிவில் 2 அடி நீளமும் 2 அடி உயரமும் 10 செமீ பருமனுடையது. கோட்டைச் சுவருக்கு வெளியே பாறைப் பகுதியில் வட்டமாகவும், நீளமாகவும் சுடுமண் வார்ப்புக்குழாய்கள், உருக்கு கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இக்கோட்டையின் நான்கு திசைகளிலும் நான்கு கோயில்கள் உள்ளன. கோட்டையின் கிழக்குப்பகுதியில் கீழக்கோட்டை (கீழவாசல்) ஆதி முனீஸ்வரர் கோயில், மேற்கு பகுதியில் மேலக்கோட்டை (மேலவாசல்) முனீஸ்வரர் கோயில், வடக்குப்பகுதியில் (வடக்குவாசல்) காளியம்மன் கோயில், தென்கிழக்குப்பகுதியில் ஐயனார், சின்ன கருப்பர் பெரிய கருப்பர், வீரப்பன், காத்தாயி அம்ன். தனங்காத்த முனி மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் உள்ளது.
மேலக்கோட்டை (மேலவாசல்) முனீஸ்வரர் கோயில் பிரரார்த்தனை ஸ்தலமாகவும், கெட்ட ஆவிகளை விரட்டும் ஸ்தலமாகவும் விளங்குவதாக மக்கள் நம்பிவருகின்றனர். இது புதுக்கோட்டையின் காவல் தெய்வமாகவும் விளங்குகின்றது. இத்திருக்கோவில் நடைதிறப்பு நடை சாத்துதல் என்பது ஏதுமில்லை, இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இத்திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கிறது. புதுக்கோட்டை அருகே முனிஸ்வரர் திருக்கோயில் ஒரு அடந்த பாலை மரங்கள் அடங்கிய காடு இருந்தது. அதில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தபோது காட்டிற்குள் தன் மனைவியுடன் வேட்டையாட வந்த வேடன் மனைவியை விட்டு பிரிந்தார், எங்கும் மனைவியை தேடி கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்க அப்போது அந்த முனிவர் வேடனை பார்த்து விவரம் கேட்க, தன் நிலையை சொல்லி அழுதார் அந்த வேடன். முனிவர் தன்னுடைய தவ வலிமையால் அவரது மனைவி இருக்கும் இடத்தை கூறினார். அவ்வாறு சென்று மனைவியை அடைந்த வேடன் தினம்தோறும் அந்த முனிவருக்கு கிழங்குகள் பழங்கள் முதலானவற்றை வழங்கினார். அப்போது அந்த முனிவர் இந்த பகுதியில் ஒரு தங்க பனைமரம் தோன்றும் என்றும் அந்த பனை மரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க பணம்பழம் விழும் என்றும், அதனை எடுத்து வாழ்க்கை நடத்தும் படி அந்த வேடனுக்கு முனிவர் கூறினார். அதேபோல் பனைமரம் தோன்றி அதிலிருந்து தங்கப் பனம்பழங்கள் விழுந்தன. இதன் மதிப்பு தெரியாத அந்த வேடன் அந்த பகுதியில் இருந்த ஒரு வர்த்தகரிடம் தங்கப்பழம் பலத்தை கொடுத்து தேவையானவற்றை வாங்கி வந்தார். இந்த விஷயம் சோழ மன்னனுக்கு கிடைக்க வணிகரை அழைத்து விவரங்களை கேட்டவர். வேடனிடம் இருந்து பெற்று தங்க பனம்பழத்தைக்கொண்டு திருவரங்குளத்தில் சிவன் கோயிலை கட்டினார். தங்கப் பனைமரம் உருவாகி தங்கத்தில் பணம் பலம் கிடைத்ததால் இந்த பகுதி பொற்பனைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்த பொற்பனை கோட்டைக்கு காவல் தெய்வமாக முனீஸ்வரர் விளங்குகிறார். 14-ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை ஐந்தாவது மன்னராக ஆட்சி புரிந்த தொண்டைமான் மன்னர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் அமைக்கப்பட்ட ஏழு அடி உயரமும் இரண்டரைஅடி அகளத்தில் நிற்கும் சிலை அமைக்கப்பட்டது. காவல் தெய்வமாக இருப்பதால் கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்கும் இச்சிலையானது ஒரே கல்லால் அமைக்கப்பட்டது. கோயிலில் உள்ள பொற்பனை காளியம்மனை வேண்டினால் திருமணம் மற்றும் குழந்தை பேறு உடனடியாக கிடைக்கும் என்பதை ஐதீகம் இக்கோவிலில் இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் வழிபாடு என்பது இன்றளவும் நடைபெற்று வருகிறது. கோயிலின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் எக்காலத்திலும் தண்ணீர் இருந்து கொண்டு இருக்கிறது. இக்கோயிலில் காளியம்மன், முனீஸ்வரர், முட்டாள் ராவுத்தர், நாகம்மாள் ஆகிய தெய்வங்களும் அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலின் அமைப்பு சிறிதாக இருக்கும் நிலையும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கி வருகிறார். வருடத்தின் முக்கிய நாட்களில் புதுக்கோட்டை பகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருகை தந்து அருள்மிகு பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் மற்றும் அதை சார்ந்துள்ள கீழவாசல் முனீஸ்வரர், ஐயனார், கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்கள், வடக்கு வாசல் காளியம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு செல்வது இன்றளவும் வழக்கமாக இருந்து வருகிறது. இத்திருக்கோயிலின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு மிகச் சிறப்பாக நிர்வாகமும் செய்யப்பட்டு வருகிறது.