Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில் - 614618, புதுக்கோட்டை .
Arulmigu Aathmanaathaswamy Temple, Avudaiyarkovil - 614618, Pudukkottai District [TM025457]
×
Temple History

தல வரலாறு

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் திருப்பெருந்துறை எனப் பெயர் பெற்றது. மக்களால் ஆவுடையார்கோயில் என்று வழங்கப்படுகிறது. அரிமர்த்தன பாண்டியனிடம்முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம். துரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த வாதவூரர் (மாணிக்கவாசகர்), மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார். அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக்...

தல பெருமை

இத்திருக்கோயில் உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் திருக்கோயில் இராஜகோபுரம், விமானங்கள், சன்னதிகள், மண்டபங்கள் ஆகியவை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு, அழகிய கலை நுட்ப வேலைபடுகளுடன் கூடிய அருள்மிகு சங்கமேஸ்வரர் சன்னதி, அருள்மிகு வேதநாயகி அம்மன் சன்னதி மண்டபங்கள், தூண்களுக்கு, உயர்தர இரசாயண தொழில்நுட்ப முறையில், புதுபொழிவு ஏற்றப்பட்டு, கடந்த 06.05.2016அன்று சிறப்பான முறையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இலக்கிய பின்புலம்

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் திருப்பெருந்துறை எனப் பெயர் பெற்றது. மக்களால் ஆவுடையார்கோயில் என்று வழங்கப்படுகிறது. அரிமர்த்தன பாண்டியனிடம்முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம். துரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த வாதவூரர் (மாணிக்கவாசகர்), மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார். அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக்...