தல வரலாறு
கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் பக்தரான ஒரு பூசாரி மீது அருள் வந்து திருவப்பூர் கவிநாட்டுக் கண்மாய் கோட்டைக்கரையில் ஒரு ஈச்சந்தூரடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் மண்ணில் புதைந்திருப்பதாகவும், அதனை தோண்டி எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு அருள்வாக்கு கூறியது. அருள்வாக்கின்படி ஸ்ரீ முத்துமாரியம்மன் தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது ஆலயம் இருக்கும் இடத்தில் பச்சைக் கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். வேண்டுதல்கள் நிறைவேற மாதந்தோறும் பௌர்ணமியன்று இரவு திருக்கோயிலுக்கு வந்து முன் மண்டபத்தில் இரவு முழுவதும் தங்கியிருந்து அம்மனை வழிபாடு செய்து மறு நாள் செல்கின்றனர். மாசித் திருவிழா 3ம் ஞாயிறு பூச்சொரிதல் விழா 16 நாட்கள் 9ம் நாள் தேர்த் திருவிழா தேரோட்டத்தன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.