Screen Reader Access     A-AA+
அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில், Woraiyur, Thiruchirappalli - 620003, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Panchavarnasamy Temple, Woraiyur, Thiruchirappalli - 620003, Thiruchirappalli District [TM025714]
×
Temple History

தல பெருமை

சோழ அரசனின் மதங்கொண்ட பட்டத்து யானையை இறைவன் கோழி வடிவில் அடக்கிய நிகழ்வை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பின்னர் கோழியின் அமைப்பிலேயே ஊரும் அமைக்கப்பெற்றது என்ற வரலாறும் உண்டு.இவ்வகையில் உறையூரானது கோழியூர், கோழிமாநகர் எனவும், வாரணம் எனவும் பெயர் பெற்றது. பாம்புகளின் தாயும் காஸ்யப முனிவரின் மனைவியுமான கத்ரு வழிபட்டு கார்கோடன் என்ற பாம்பின் அகோர வடிவம் நீங்கிய தலம் கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இத்திருக்கோயிலில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இங்கு தான் வந்து உறையும் என்பதாலேயே இத்திருத்தலம் உறையூர் திருத்தலம் எனப்போற்றப்படுகிறது. எனவே செய்யும் தொழிலில் வெற்றி எதிரியை வெல்லும் திறன், சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றில் இருந்து நிவர்த்தி ஆகியவற்றை நமக்களித்து அருள்புரியம் அருளாளரே உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் என்பது...