அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில், Woraiyur, Thiruchirappalli - 620003, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Panchavarnasamy Temple, Woraiyur, Thiruchirappalli - 620003, Thiruchirappalli District [TM025714]
×
Temple History
தல பெருமை
சோழ அரசனின் மதங்கொண்ட பட்டத்து யானையை இறைவன் கோழி வடிவில் அடக்கிய நிகழ்வை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பின்னர் கோழியின் அமைப்பிலேயே ஊரும் அமைக்கப்பெற்றது என்ற வரலாறும் உண்டு.இவ்வகையில் உறையூரானது கோழியூர், கோழிமாநகர் எனவும், வாரணம் எனவும் பெயர் பெற்றது.
பாம்புகளின் தாயும் காஸ்யப முனிவரின் மனைவியுமான கத்ரு வழிபட்டு கார்கோடன் என்ற பாம்பின் அகோர வடிவம் நீங்கிய தலம் கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இத்திருக்கோயிலில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இங்கு தான் வந்து உறையும் என்பதாலேயே இத்திருத்தலம் உறையூர் திருத்தலம் எனப்போற்றப்படுகிறது. எனவே செய்யும் தொழிலில் வெற்றி எதிரியை வெல்லும் திறன், சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றில் இருந்து நிவர்த்தி ஆகியவற்றை நமக்களித்து அருள்புரியம் அருளாளரே உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் என்பது...சோழ அரசனின் மதங்கொண்ட பட்டத்து யானையை இறைவன் கோழி வடிவில் அடக்கிய நிகழ்வை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பின்னர் கோழியின் அமைப்பிலேயே ஊரும் அமைக்கப்பெற்றது என்ற வரலாறும் உண்டு.இவ்வகையில் உறையூரானது கோழியூர், கோழிமாநகர் எனவும், வாரணம் எனவும் பெயர் பெற்றது.
பாம்புகளின் தாயும் காஸ்யப முனிவரின் மனைவியுமான கத்ரு வழிபட்டு கார்கோடன் என்ற பாம்பின் அகோர வடிவம் நீங்கிய தலம் கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இத்திருக்கோயிலில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இங்கு தான் வந்து உறையும் என்பதாலேயே இத்திருத்தலம் உறையூர் திருத்தலம் எனப்போற்றப்படுகிறது. எனவே செய்யும் தொழிலில் வெற்றி எதிரியை வெல்லும் திறன், சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றில் இருந்து நிவர்த்தி ஆகியவற்றை நமக்களித்து அருள்புரியம் அருளாளரே உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் என்பது பேருண்மையாகும்.
வேதம், ஆகமம், புராணம் மற்றும் எல்லாக் கலைகளிலும் வல்லவராக விளங்கிய உதங்கமாமுனிவரின் மனைவி பிரபை என்பாள் கங்கையில் நீராடும் போது ஒரு முதலை அவளை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தி விட்டது. எல்லாக் கலைகளையும் முற்றக் கற்றும் முனிபுங்கவராகியும் அவர் மனம் இந்நிகழ்ச்சியால் அலைந்து அமைதியுறாமல் தத்தளித்தது. கலைப்பயிற்சியாலும், தத்துவ ஆய்வாலும், யோகப் பயிற்சியாலும் சிறந்த அவரால் மனத்தை அமைதியாக்க முடியவில்லை. சிவத்தல வழிபாட்டைத் தொடங்கினார். உதங்கமுனிவர் உறையூர்க் திருமூக்கீச்சுரத்தடிகளை வந்து வழிபட்டார். ஐவகை நிற லிங்கமாக காட்சிக் கொடுத்து ஐம்பபுதங்கள், ஐம்புலன்கள் யாவும் தானே என்பதை முனிவருக்கு உண்ர்த்தி அவருடைய மன கலக்கத்தை போக்கி மன அமைதியை அருளியவர். இதனால் இத்தல இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என போற்றப்படுகிறார்..
முறஞ்செவி வாரம் முன் சமம் முருக்கிய புறஞ்செவி வாரணம்
எனவே, இத்திருத்தலம் பஞ்சபூத தலங்களுக்கு இணையாக கருதப்படுகிறது.