தல வரலாறு
இத்திருக்கோயில் காலத்தால் 100 ஆண்டுகளுக்கு உட்பட்டு கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலில் மூலவர் ஸ்ரீ வள்ளால கண்ட அய்யனார் சன்னதியினை தவிர ஸ்ரீ விநாயகர் சன்னதி, ஸ்ரீ முருகன் சன்னதி, திரிபுர சுந்தரி சன்னதி, மதுரை வீரன் சன்னதி, பாலடியான் சன்னதிகள் உள்ளது, இத்திருக்கோயிலில் மூன்று நிலை ராஜ கோபுரம் அமையப்பெற்றுள்ளது.