தல வரலாறு
அருள்மிகு நீலமேகப்பெருமாளின் திருக்கோயிலுடன் இணைந்த இரண்டு திருக்கோயில்களில் ஒன்று ஸ்ரீ லெட்சுமி நாராயணர் திருக்கோயில். இத்திருக்கோயில் முத்துபூபாலசமுத்திரம் என வழங்கும் குளித்தலை எம்.பி.எஸ் அக்ரகாரத்தில் உள்ளது. இத்திருக்கோயில் சிறியதானாலும் கீர்த்தி பெரியது. இத்திருக்கோயிலின் கருவறையின் இருபுறமும் மிக சக்தி வாய்ந்த இரண்டு அதிதேவதைகள் உள்ளன. ஒன்று எம்பெருமான் ஸ்ரீமந் நராயணின் வலகரத்தில் உள்ள சுதர்சனம் என்ற சக்கரத்தாழ்வார் எழுந்தருளியுள்ளார். இத்திருக்கோயிலின் கருவறையில் உள்ள ஸ்ரீ லெட்சுமி நாராயணர் தன் மடியில் ஸ்ரீ லட்சுமியை இருத்தி மங்களமான தெய்வீகமான அருள் வழங்கும் தெய்வீக தம்பதிகளாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.