Screen Reader Access     A-AA+
அருள்மிகு மெய்நின்றநாதசுவாமி திருக்கோயில், கீரமங்கலம், ஆலங்குடி வட்டம் - 614625, புதுக்கோட்டை .
Arulmigu Meinindra Natha Swamy Temple, Keeramangalam - 614625, Pudukkottai District [TM026081]
×
Temple History

தல வரலாறு

சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றில் பெண்களின் கூந்தல் தொடர்பாக இறைவன் இயற்றிய கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிரை தும்பி குறுந்துகை என்ற தொடர்பாக மதுரையில் பாண்டிய மன்னன் அவையில் சிவனுக்கும், தலைமை புலவர் நக்கீரருக்கும் தர்க்கம் நடந்த பின்னர் நக்கிரமங்கலத்தில் மெய்நின்றநாத கோவிலுக்கு வந்த நக்கீரர் எதிரே உள்ள தடாகத்தில் நீராடி ஈர உடலில் சிவனை நோக்கி நான் கேள்வி கேட்டதில் தவறு உள்ளதா என்று கேட்டதாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் அதற்க்கு மெய்ய உறைக்கும் மெய்நின்றநாதராக இருக்கும் சிவன் உன் கேள்வியில் தவறு இல்லை என்று நக்கீரரிடம் சொன்னதாக கூறப்படுகிறது