Arulmigu Ananthanarayanaperumal Temple, Vengatajalapuram - 621011, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Ananthanarayanaperumal Temple, Vengatajalapuram - 621011, Thiruchirappalli District [TM027179]
×
Temple History
தல வரலாறு
பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை திருமங்கை மன்னன் என்ற அரசர் நாட்டை நல்லாட்சி புரிந்து வந்தார். வைஷ்ணவத்தை தானமாகவும், பேரின்பமாக கண்டு பெருமாளுக்கு நிறைய நிலங்கள், பெரிய கோவில்கள் கட்டியும், சிதலமைடந்த கோயிலை முழுமையடைய செய்தும் பல கோயிலுக்கும் கும்பாபிஷேகம் கண்டு மகிழ்ந்தான்.
அவர்கள் சபையில் பண்டிதர் சொல்படி கோசோலை அமைத்து பல கோவிலுக்கு நிறைய பால் கொடுத்தும் பால் அபிஷேகம் செய்தும் இன்புற்றான். மேலும், இதுபோல் நிறைய கோயிலுக்கு பால்தர எண்ணி நிறைய காரம் பசுக்களை வாங்கி, அவன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்கள் எல்லாம் அங்குள்ள கோயிலுக்கு நிறைய பால் தானம் வழங்கினான்.
இப்படி இருக்க கோசோலைக்கு தளபதியாகிய ஒருவருரை நியமித்தார். அவருடைய பெயர் வெங்கடாசலம் நாயக்கர் அவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஊர்ஊராக...பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை திருமங்கை மன்னன் என்ற அரசர் நாட்டை நல்லாட்சி புரிந்து வந்தார். வைஷ்ணவத்தை தானமாகவும், பேரின்பமாக கண்டு பெருமாளுக்கு நிறைய நிலங்கள், பெரிய கோவில்கள் கட்டியும், சிதலமைடந்த கோயிலை முழுமையடைய செய்தும் பல கோயிலுக்கும் கும்பாபிஷேகம் கண்டு மகிழ்ந்தான்.
அவர்கள் சபையில் பண்டிதர் சொல்படி கோசோலை அமைத்து பல கோவிலுக்கு நிறைய பால் கொடுத்தும் பால் அபிஷேகம் செய்தும் இன்புற்றான். மேலும், இதுபோல் நிறைய கோயிலுக்கு பால்தர எண்ணி நிறைய காரம் பசுக்களை வாங்கி, அவன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்கள் எல்லாம் அங்குள்ள கோயிலுக்கு நிறைய பால் தானம் வழங்கினான்.
இப்படி இருக்க கோசோலைக்கு தளபதியாகிய ஒருவருரை நியமித்தார். அவருடைய பெயர் வெங்கடாசலம் நாயக்கர் அவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஊர்ஊராக சென்று கோ மேய்த்து அதில் வரக்கூடிய பாலை அனைத்து கோயிலுக்கும் தானமாக வழங்கினார். வரும் வழியில் பச்சைமலை அடிவாரத்தில் இயற்கை சூழ பூக்கள் மலர, கொடிகள் தலை அசைக்க, இயற்கை அழகை ரசித்தான் தளபதி வெங்கடாசலம். இங்கேயே தங்கி காரம் பசுக்களை மேய்த்து கொண்டிருக்கும் காலத்தில் இரண்டு காரம் பசு ஸ்ரீ அனந்த நாராயணன் பூமிக்கு அடியில் இருப்பதை கண்டு மகிழ்ந்து அவருக்கு பால் அபிஷேகம்செய்தது இன்னொரு பசு ஸ்ரீதேவிக்கும் மற்றொரு பசு பூமிதேவிக்கும் பால் சுரந்து கொண்டிருப்பதை கண்ட, தளபதி உடனே மன்னனுக்கு தகவல் அனுப்பினான்.மன்னர் இதை கேட்டு வியந்து, அங்கேயே தங்கி இருந்து உண்மையை அறிந்து கொண்டு வர தூது அனுப்பினான். மன்னனின் உத்தரவுப்படி தளபதி வெங்கடாசலம் பால் சுரந்த இடத்தில் இரவு அங்கேயே கண் அயர்ந்தான். பெருமாள் அவன் கனவில் தோன்றி நான் பூமிக்கு அடியில் இருப்பதாகவும் என்னை மேலே கொண்டு வந்து, கோவில் கட்டும்படியும் இரவில் ஆசாரி சொல்வதை கண்டு, உடனே வேலை ஆட்கள் வைத்து தோண்ட ஆரம்பிக்க அங்கேயே ஸ்ரீதேவி, பூமாதேவி ஸமேத ஸ்ரீ அனந்த நாராயணன் தான்தோன்றியது கண்டு தளபதி மகிழ்ந்து இன்புற்றான். உடனே மன்னனுக்கு தூது அனுப்பி விவரத்தை கூறிவிட முற்பட்டான். ஆனால், பெருமாள் எனக்கு திருக்கோயிலை கட்டி கும்பாபிஷேகம் செய்து விட்டு உனது பெயரை இந்த ஊருக்கு இட்டுவிட்டு திருமங்கை மன்னனுக்கு செய்தி அனுப்பும்படி உத்தரவுட்டார் எம்பெருமான்.எம்பெருமான் உத்தரவுப்படி அனைத்து மாடுகளையும் விற்று, விற்று அதில் கிடைத்த பொன், பொருள் மற்றும் தன்னிடம் இருந்சத அனைத்து செல்வங்களையும் வைத்து திருக்கோயிலை, கட்டி வேதங்கள் முழுங்க, மயில்கள் நாட்டியம் இசைக்க, கருடாழ்வார்கள் கோவிலை சுற்றி வர, கதிரவன் குணதிசை கண்டு மலர, நாதஸ்வரமும் வரசங்கும் நின்று ஊத மிக விமர்சையாக கும்பாபிஷேகம் செய்தான். அந்த செய்தியை மன்னனுக்கு தூது அனுப்பினான். மன்னன் விவரத்தை கேட்டறிந்து மிகுந்த சந்தோஷம் அடைந்தான். ஆகவே,இந்த ஊர் பெயரை வெங்கடாசலபுரம் எனவும், அதில் தான் தோன்றியதும் ஸ்ரீதேவி, பூமாதேவி, அனந்த நாராயணன் என பெயரிட்டு கோயிலுக்கு நிறைய கைங்கைர்யம் செய்ய நிறைய நிலங்களை ஒதுக்கி பூஜை, புனங்காரங்கள் செய்ய உத்தரவிட்டார் என்பது ஐதிகம். இந்த கோயிலின் தலவரலாறு ஆகும். இந்த கோயிலின் புண்ணிய தீர்த்தம் வன்னிய மரம் ஆகும்.