தல வரலாறு

இத்திருக்கோயில் எம்.களத்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பிடாரி மதுரகாளியம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார் அருகில் அருள்மிகு மதுரைவீரன் காவல் தெய்வமாகவும் விநாயகரும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.
தல பெருமை

மூலவர் ஸ்ரீ மதுரகாளியம்மன் எட்டு கையுடன் அமர்ந்தவாறு அருள் பாலிக்கிறார். உலகத்தை தீய சக்திகளில் இருந்து காப்பாற்ற அம்பிகை பல அவதாரம் எடுத்து வந்தாள். அவ்வாறு வந்த சக்திகளில் மதுரகாளியம்மன் ஒன்றாகும். அந்த சக்தி முருங்கைகளத்தூரில் குடிகொண்டு பலவித நன்னைகளைச் செய்து வருகிறாள்.இந்த கோவில் 150 ஆண்டுகள் பழமையானது. இந்த திருக்கோயில் 2001 ஆம் ஆண்டு கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றது.இத்திருக்கோயிலுக்கு 4.50 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது.