அருள்மிகு சுந்தர மூர்த்தி விநாயகர் திருக்கோயில், மேற்படி கோயில் தெரு, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Sundara Moorthy Vinayagar Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000294]
×
Temple History
தல வரலாறு
தருமமிகு சென்னையில் கயிலைக்கு ஒப்பான மயிலையின் வடபுறம் பிருந்தாவரண்ய ஷேத்திரம் எனப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திக்கோயிலின் மேற்குப்புரம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் இத்திருக்கோயில் வடக்கு பக்கமாக எழுந்தருளியுள்ளது.முன்பு ஒரு சமயம் அகத்திய மாமுனிவர் தீர்த்த பாலீஸ்வரரை தரிசிக்க வரும்பொழுது விநாயகரை ப்ரதிஷ்டை செய்ய விரும்பினார். அப்பொழுது சித்தி புத்தியுடன் சுந்தரமூர்த்தி விநாயகரை வடிவமைத்து வடக்கு முகமாக ஆலயம் எழுப்பி திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடத்தி வழிபட்டு சென்றார். இங்கு விநாயகர் வடக்கு முகமாக இருப்பதன் காரணம் சூத்திர ரகஸ்யம் என்னும் நுலில் சித்தி புத்தியோடு வடிவமைத்து இருப்பதால் வடக்கு முகமாக ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது மரபு. அதோடு மட்டுமல்லாமல்...தருமமிகு சென்னையில் கயிலைக்கு ஒப்பான மயிலையின் வடபுறம் பிருந்தாவரண்ய ஷேத்திரம் எனப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திக்கோயிலின் மேற்குப்புரம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் இத்திருக்கோயில் வடக்கு பக்கமாக எழுந்தருளியுள்ளது.முன்பு ஒரு சமயம் அகத்திய மாமுனிவர் தீர்த்த பாலீஸ்வரரை தரிசிக்க வரும்பொழுது விநாயகரை ப்ரதிஷ்டை செய்ய விரும்பினார். அப்பொழுது சித்தி புத்தியுடன் சுந்தரமூர்த்தி விநாயகரை வடிவமைத்து வடக்கு முகமாக ஆலயம் எழுப்பி திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடத்தி வழிபட்டு சென்றார். இங்கு விநாயகர் வடக்கு முகமாக இருப்பதன் காரணம் சூத்திர ரகஸ்யம் என்னும் நுலில் சித்தி புத்தியோடு வடிவமைத்து இருப்பதால் வடக்கு முகமாக ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது மரபு. அதோடு மட்டுமல்லாமல் வடக்கு திக்கு குபேரன் வாசம் செய்வது. அதனால் இவ்விநாயகரை வழிபடுவோருக்கு செல்வ வளங்கள் பெருக வேண்டும் என்பதற்காகவும், மேலும் சித்தி என்றால் காரிய சித்தி அதாவது நாம் செய்யும் வேலைகள், துவங்கப்போகும் வேலைகள் எல்லாம் நல்ல முறையில் நடக்கும் என்று பொருள். மேலும் புத்தி என்றால் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வார்த்தைக்கு இணங்க மாணவ, மாணவிகள் சரஸ்வதி வடிவில் இருக்கும் புத்தி தேவியின் அருளால் நன்றாக படித்து தேர்ச்சி பெறுவார்கள். இங்கு மேலும் நாகசுப்ரமண்யர் ப்ரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கிறது. மக்களுடைய வம்சம் தழைத்து ஓங்க வேண்டும் என்பதற்காக நாகசுப்ரமண்யரை ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் காலை 6.30 மணி முதல் மாலை 5.30 முடியவும் நடை திறந்திருக்கும்.ஆலயத்தின் தினசரி நித்யபடி பூஜை சிவாகாம முறைப்படி காலை சந்தி 8.00 மணியளவில் சிறப்புற நடைபெற்று வருகிறது. ஆலயத்தில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி மற்றும் வருடாந்திர திருவிழாக்களாக விநாயகர் சதுர்த்தி, 12 தின பிரம்மோற்சவம், ஆருத்ரா உற்சவம், போன்றவை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தினை ஆன்மீக அன்பர்கள் பெருவாரியாக வந்து தரிசித்து அருள்மிகு சித்தி புத்தி சமேத சுந்தரமூர்த்தி விநாயகரின் அருளுக்கு பாத்திரராக அன்புடன் வேண்டுகிறோம்.சென்னை திருவல்லிக்கேணி இரயில் நிலையத்திலிருந்து 1கிமீ துரத்திலும், எழும்பூர்-சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து 4.கிமீ துரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு மெரினா கடற்கரை வழியாகவும், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகவும் வரலாம்.