தல பெருமை

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் நெரூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நெரூர் ராஜா வாய்க்கால் ஒட்டி அமைந்துள்ளது. காளியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்று கிழமை அன்று மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டால் திருமண தடை விலகும் என்பது ஐதீகம். மேலும் இத்திருக்கோயிலில் அம்மன் ஒன்பது இனங்களாக காட்சி தருவது சிறப்பாகும்.