தல பெருமை
திருவாதவூர், பாண்டியநாட்டு பைப்புத் தலங்களில் ஒன்று, இது சைவசமயக்குரவர்கள் நால்வரில் திருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலம். கடையெழு வள்ளல்களில் ஒருவராகிய பாரி மன்னனின் தென்பறம்பு நாட்டு மூன்னூறு ஊர்களில் ஒன்று. மதுரையில் சங்கம் அமைத்துத் தமிழாய்ந்த புலவர்களில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் பாராட்டப்பட்ட கபிலர் பிறந்த ஊர். சங்க தமிழ்ஊர் என்று கலவெட்டுகளில் போற்றப்படும் சிறப்பை பெற்ற ஊர். சங்க தமிழ்ஊர் என்று கல்வெட்டுகளில் போற்றப்படும் சிறப்பை பெற்ற ஊர். சிவபெருமான், திருமாலுக்கு வேதம் நானே என்று உபதேசித்த தலம். மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் சிலம்பொலி கேட்பிக்கச் செய்த தலம் என்பதை, திருஞானசம்பந்தரின் சேத்திரக் கோவைப்பாடலால் இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற வைப்புதலம். மேலும் இத்தலத்தில்...தல பெருமை
திருவாதவூர், பாண்டியநாட்டு பைப்புத் தலங்களில் ஒன்று, இது சைவசமயக்குரவர்கள் நால்வரில் திருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலம். கடையெழு வள்ளல்களில் ஒருவராகிய பாரி மன்னனின் தென்பறம்பு நாட்டு மூன்னூறு ஊர்களில் ஒன்று. மதுரையில் சங்கம் அமைத்துத் தமிழாய்ந்த புலவர்களில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் பாராட்டப்பட்ட கபிலர் பிறந்த ஊர். சங்க தமிழ்ஊர் என்று கலவெட்டுகளில் போற்றப்படும் சிறப்பை பெற்ற ஊர். சங்க தமிழ்ஊர் என்று கல்வெட்டுகளில் போற்றப்படும் சிறப்பை பெற்ற ஊர். சிவபெருமான், திருமாலுக்கு வேதம் நானே என்று உபதேசித்த தலம். மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் சிலம்பொலி கேட்பிக்கச் செய்த தலம் என்பதை, திருஞானசம்பந்தரின் சேத்திரக் கோவைப்பாடலால் இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற வைப்புதலம். மேலும் இத்தலத்தில் மதுரையம்பதியின் சொக்கநாதப்பெருமான் வாதபுரீசுவரராகவும், அங்கயற்கண்ணம்மை ஆரணவல்லித் தாயாராகவும் எழுந்தருளி அருள்பாலிப்பதாக வாதபுரித்தல மகாத்மியத்தில் கூறப்படுகிறது. மேலும் இத்தலம் மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமான சனீசுவரன் சாப நீக்கம் பெற்ற தலம். வாயுதேவன் சிறந்த புத்திரனான அனுமனைப் பெறுதற்குக் காரணமாக அமைந்த தலம். கபிலமுனிவரின் வீரகத்தி தோசத்தை நிவர்த்தி செய்த தலம். பைரவமூர்த்தி ஆணவத்தால் தான் இழந்த வாகனமான சுவானத்தை மீளப்பெற்ற தலம். பிருகு முனிவரின் சாபத்தால் தனது தன்மை குன்றிய அக்கினி தனது முந்தைய நிலையைத் திரும்பப் பெற்ற தலம். பிரம்மதேவர் நோற்ற ஆரணகேத வேள்வியில் உமையம்மை, ஆரணவல்லித்தாயார் எனும் திருநாமத்துடன் தோன்றி பிரமனுக்கு அருள்பாலித்து, உறைகின்ற தலம். கௌதம முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். தென்திசைக் காவலனான எமதருமன் வழிபட்டு அருள்பெற்ற தலம். பிருகு முனிவரின் மகள் அரஜா வழிபாடு இயற்றி அமரலோகம் எய்தக் காரணமாக அமைந்த தலம். வாயு பகவான் மறுபிறப்பில் நாதசர்மா எனும் அந்தணராகப் பிறந்து, நற்புத்திரப் பேறும், சிவகதியும் அடைவதற்கு உதவிய தலம். பாண்டவர்களின் இராசசூய வேள்விக்குத் துணைபுரிந்து, பிறகு திருமாலால் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷாமிருகம் வீற்றிருக்கின்ற தலம். மதுரையம்பெருமான் கால்மாறியாடக் காரணமாக விளங்கிய இராசசேகர பாண்டியன் திருப்பணிகள் பல செய்து வழிபாடு நிகழ்த்திய தலம். மகாசேன பாண்டியனுக்கு, சத்ருஞ்சய பாண்டியன் எனும் புகழ்மிக்க மகவு பெறக் காரணமாக அமைந்த தலம்.