Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருமறைநாத சுவாமி திருக்கோவில், திருவாதவூர், மதுரை - 625110, மதுரை .
Arulmigu Thirumarainatha Swamy Temple, Thiruvathavur, Madurai - 625110, Madurai District [TM031983]
×
Temple History

தல பெருமை

தல பெருமை திருவாதவூர், பாண்டியநாட்டு பைப்புத் தலங்களில் ஒன்று, இது சைவசமயக்குரவர்கள் நால்வரில் திருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலம். கடையெழு வள்ளல்களில் ஒருவராகிய பாரி மன்னனின் தென்பறம்பு நாட்டு மூன்னூறு ஊர்களில் ஒன்று. மதுரையில் சங்கம் அமைத்துத் தமிழாய்ந்த புலவர்களில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் பாராட்டப்பட்ட கபிலர் பிறந்த ஊர். சங்க தமிழ்ஊர் என்று கலவெட்டுகளில் போற்றப்படும் சிறப்பை பெற்ற ஊர். சங்க தமிழ்ஊர் என்று கல்வெட்டுகளில் போற்றப்படும் சிறப்பை பெற்ற ஊர். சிவபெருமான், திருமாலுக்கு வேதம் நானே என்று உபதேசித்த தலம். மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் சிலம்பொலி கேட்பிக்கச் செய்த தலம் என்பதை, திருஞானசம்பந்தரின் சேத்திரக் கோவைப்பாடலால் இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற வைப்புதலம். மேலும் இத்தலத்தில்...