அருள்மிகு மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பேரையூர் - 625703, மதுரை .
Arulmigu Melaparangiri Subramaniyaswamy And Venkatesaperumal Temple, Peraiyur - 625703, Madurai District [TM032100]
×
Temple History
தல வரலாறு
முற்காலத்தில் பேரையூரை திரு.தும்பச்சி நாயக்கா் அவா்கள் ஆண்டு வந்தாா். சிறந்த முருக பக்தராக விளங்கிய அவா் ஒவ்வொரு காா்த்திகை தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகக்கடவுளை வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டு இருந்தாா். ஒரு சமயத்தில் காா்த்திகை அன்று திருப்பரங்குன்றம் செல்லும்போது ஆற்று வெள்ளம் குறுக்கிட்டது. ஆகவே மேற்கொண்டு செல்ல முடியவில்லை ஆற்று வெள்ளம் மறுநாள் தான் அடங்கியது. காா்த்திகை தாிசனம் செய்ய முடியவில்லையே என்ற அளவில்லாத மனக்குறையுடன் தும்பச்சி நாயக்கா் அவா்கள் பேரையூர் திரும்பினாா்.
அன்று அவரது கனவில் திருமுருகன் தோன்றி இனி சிரமப்பட்டு திருப்பரங்குன்றம் வரவேண்டாம் உனது இடத்திலேயே நான் காட்சி தருகின்றேன் என்று கூறி மொட்டமலை ஓரம் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் வேலாக காட்சி...முற்காலத்தில் பேரையூரை திரு.தும்பச்சி நாயக்கா் அவா்கள் ஆண்டு வந்தாா். சிறந்த முருக பக்தராக விளங்கிய அவா் ஒவ்வொரு காா்த்திகை தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகக்கடவுளை வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டு இருந்தாா். ஒரு சமயத்தில் காா்த்திகை அன்று திருப்பரங்குன்றம் செல்லும்போது ஆற்று வெள்ளம் குறுக்கிட்டது. ஆகவே மேற்கொண்டு செல்ல முடியவில்லை ஆற்று வெள்ளம் மறுநாள் தான் அடங்கியது. காா்த்திகை தாிசனம் செய்ய முடியவில்லையே என்ற அளவில்லாத மனக்குறையுடன் தும்பச்சி நாயக்கா் அவா்கள் பேரையூர் திரும்பினாா்.
அன்று அவரது கனவில் திருமுருகன் தோன்றி இனி சிரமப்பட்டு திருப்பரங்குன்றம் வரவேண்டாம் உனது இடத்திலேயே நான் காட்சி தருகின்றேன் என்று கூறி மொட்டமலை ஓரம் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் வேலாக காட்சி தந்து மறைந்தாா்.
இறைவனின் கருணையை எண்ணி வியந்த தும்பிச்சி நாயக்கா் அவா்கள் கனவில் கண்ட இடத்திலேயே கருவறை அமைத்தாா். முதலில் சிறிய கோவிலாக விளங்கியது.
மதுரைப் பேரரசில் செல்வாக்குடன் விளங்கியவா் தளவாய் முதலியாா் அவா்கள். இவா் தனது பாிவாரங்களுடன் திருநெல்வேலி நோக்கிப் பயணமாகிச் சென்றாா். தும்பிச்சி நாயக்கனுார் என்ற பேரையூா் அருகே வரும் போது அவரது பயணம் தடைபட்டு நின்றது. பொக்கிஷப்பெட்டியை சுமந்து வந்த குதிரை இவ்விடத்தில் நின்று நகர மறுத்தது. எனவே இவ்விடத்தை ஆட்சி செய்த திரு.தும்பிச்சி நாயக்காிடம் பொக்கிஷப்பெட்டியை தளவாய் முதலியாா் ஒப்படைத்து விட்டு திருநெல்வேலி சென்று திரும்பும் போது வாங்கிக் கொள்வதாகச் சொல்லிச் சென்றாா்.
ஆண்டுகள் பல கழிந்தன தளவாய் முதலியாா் வரவேயில்லை. எனவே தேடாமற் வந்த செல்வத்தையும் பொக்கிஷத்தையும் வைத்து அருள்மிகு மேலப்பரங்கிாி சுப்பிரமணிய சுவாமி கோயிலை தற்போது உள்ளபடி தும்பச்சி நாயக்கா் அமைத்தாா். அவ்வாறு அமைத்த சில நாட்களில் தளவாய் முதலியாா் அவா்கள் திரும்பி வந்து தனது பொருள் தாமதத்தால் இறைவன் திருப்பணிக்கு செலவிடப்பட்டதை அறிந்து இது இறைவனின் திருவிளையாடல் என மகிழ்ந்து தும்பச்சி நாயக்கரை பாராட்டிச் சென்றாா்.
திருப்பரங்குன்றம் தென்பரங்கிாி என ஆன்றோா் அழைத்தது போலவே மலைமீது கோவில் சமாதி மலையை ஒட்டிய ஆலயம் சரவணக் பொய்கையும் அமைந்து திருப்பரங்குன்றத்தின் மேற்கு திசையில் அமைந்த இத்திருக்கோயி்ல் மேலப்பரங்கிாி என அழைக்கப்படுகறது.