Screen Reader Access     A-AA+
அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில், பள்ளப்பட்டி - 624002, திண்டுக்கல் .
Arulmigu Dhrowpathiamman Temple, Pallapatti - 624002, Dindigul District [TM032185]
×
Temple History

தல பெருமை

சூரிய வமத்தினை சேர்ந்த குந்திமாதேவியின் புதல்வர்களான பஞ்சபாண்டவர்களின் வழி தோன்றல்களாக வந்தவர்கள் தான் கவரய நாயக்கர் சமூகத்தினை சேர்ந்தவர்கள். இச்சமூகத்தினர் ஒன்று கூடி ஒவ்வொரு ஊரிலும் வாழும் பகுதிக்கு எருமைக்காரத் தெரு என்றே அழைக்கப்பட்டு வந்தது. இச்சமூகத்தினை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஊரிலும் தங்கள் குல தெய்வவழிபாட்டிற்காக அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் கட்டி வழிபாடு செய்துள்ளனர். இதே போன்று திண்டுக்கல் பூர்வீமாகக் கொண்ட தற்போது தொழில் நிமித்தம் 11 ஊர்களில் வாழ்ந்து வரும் 24 மனை சாந்த குல சௌமிய நாராயண கவுரய நாயக்கர் ஜாதியார்கள் ஒன்று சேர்ந்து சுமார் 90 ஆண்டுடிற்கு முன்னர் தங்கள் குல தெய்வ வழிபாட்டு ஏற்பாட்டிற்காக அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் ஸ்தாபித்துள்ளனர்.