தல வரலாறு
திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வட்டம், கன்னிவாடியில், செம்பட்டி - ஒட்டன்சத்திரம் மெயின் ரோட்டின் அருகில் அருள்மிகு கோட்டை கருப்பணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மூலவர் கருப்பணசுவாமி ஆவார். இத்திருக்கோயிலில் மாசி பெருந்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கருப்பணசுவாமி இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக உள்ளார். இத்திருத்தலத்திற்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர்.